Sunday 8 April 2018

காவேரி வாரியம் நடிகர்களின்,யதார்த்தமற்ற கண்டனக்கூட்டம்

காவேரி வாரியம் அமைக்காததை கண்டித்து அறவழி போராட்டம் நடத்திய

நடிகர்கள் சங்கமத்தில், தங்களுடைய, கண்டனத்தை தெரிவிக்கும் முகங்கள்,

ஒருசிலரிடம்,மட்டும்  காணமுடிந்தது, வருத்தத்துக்கு உரியதே.

திருமண, திரைப்பட விழாவில்,சந்தித்து,  கை குலுக்கி கொள்ளும்,

கலாசாரம், சிரித்து பேசிக்கொண்டு, நலம் விசாரிக்கும், கலந்துரையாடலை,

காணும்போது, தமிழக மக்களாகிய, நாம், எவளவு  கேனையர்கள்,என்பதை,

நமக்கு நாமே  சபாஷ், போட்டுகொண்டு, மார் தட்டி கொள்ள வேண்டும், என்று

நினைக்க தோன்றுகின்றது.  காவேரி  தண்ணீர், கரை புரண்டு, ஓடும் என்றே,

தோன்றுகின்றது.  தமிழகம் நிச்சயம் தன்னுடைய ஏமாளித்தனத்தில்,இருந்து,

விடுபட, வாய்ப்பு  இல்லை என்றே தோன்றுகின்றது. அப்பாவி தமிழக,

மக்களை,கடவுள், தான் காப்பாற்ற வேண்டும். தமிழக மக்கள்

இருந்தாலும் இவ்வளவு அப்பாவியாக இருக்கக்கூடாது.


No comments:

Post a Comment