Friday 13 April 2018

விளம்பி வருஷம் காவிரியில் தண்ணீர் பெற்று தருமா?

14.04.2018 காலை 06.05 நிமிடத்தில் பிறக்கும் தமிழ் புத்தாண்டான விளம்பி

வருஷத்தை தமிழர்கள், போற்றி வணங்குவோம். இவ்வருட பலன்களில்,

ராசிகளுக்கு பலன் எழுத போன எமக்கு, பிடரியில், யாரோ, தட்டுவது போல்

இருந்தது. விழித்துக்கொண்டேன். காவிரியில், தண்ணீர் வந்தாலே, எல்லா

ராசிக்கும் நல்ல பலன் தானே.? இறை அருள் வேண்டுதல் செய்து, பலன்,

எழுதுகின்றேன்.  காவேரி வாரியம் அமைத்து தண்ணீர் கிடைக்குமா அல்லது

நல்ல மழை பெய்து, கரைபுரண்டு ஓடுவாளா  காவேரி. பலனை பார்போம்.

சூரியனை தவிர, அனைத்து கிரகங்களும், நம் தமிழகர்களின், மனசை

 குளுர்விக்க போகின்றதாக, பலன்கள்,பறைசாற்றுகின்றன. எப்படி.?

அரசியல் வாதிகளின்,  சூட்ஷி, பலிக்க போவதில்லை.  அனைத்துகிரகங்களும்,

ஒன்றுசேர்ந்து,  அரசியல் சூட்சியை, சாத்வீக, முறையினால், முறியடிக்க

போகின்றது. நிச்சயமாக, அறவழிபோராட்டம்,வெற்றி அடையப் போகின்றது.

அனைத்துகிரகங்களும், ஒன்றுசேர்ந்து,தமிழக மக்களின்

நீண்டகால,எதிர்பார்ப்பை

நிறைவேற்றி கொடுக்கபோகின்றது. பார்போம் காவேரியா, நல்ல மழையா?

பொருத்து இருந்து பார்போம். வெற்றி நிச்சயம்.

19.052018  யாம் எம்முடைய விளம்பி வருட,பலன் சொல்லும் பதிவில்

கூறியவை , பலித்துவிட்டது,  விளம்பி வருட பலன் பலித்துவிட்டது.

ஜோதிடம்,உண்மை என்பதை,பறைசாற்றி விட்டது.உண்மை ஜெய்த்து

 விட்டது.

வாழ்க ஜோதிடம் வளர்க ஜோதிடம், அனுதினமும் ஜோதிடத்தை சுவாசித்து,

ஜீவிப்போம்......




Sunday 8 April 2018

காவேரி வாரியம் நடிகர்களின்,யதார்த்தமற்ற கண்டனக்கூட்டம்

காவேரி வாரியம் அமைக்காததை கண்டித்து அறவழி போராட்டம் நடத்திய

நடிகர்கள் சங்கமத்தில், தங்களுடைய, கண்டனத்தை தெரிவிக்கும் முகங்கள்,

ஒருசிலரிடம்,மட்டும்  காணமுடிந்தது, வருத்தத்துக்கு உரியதே.

திருமண, திரைப்பட விழாவில்,சந்தித்து,  கை குலுக்கி கொள்ளும்,

கலாசாரம், சிரித்து பேசிக்கொண்டு, நலம் விசாரிக்கும், கலந்துரையாடலை,

காணும்போது, தமிழக மக்களாகிய, நாம், எவளவு  கேனையர்கள்,என்பதை,

நமக்கு நாமே  சபாஷ், போட்டுகொண்டு, மார் தட்டி கொள்ள வேண்டும், என்று

நினைக்க தோன்றுகின்றது.  காவேரி  தண்ணீர், கரை புரண்டு, ஓடும் என்றே,

தோன்றுகின்றது.  தமிழகம் நிச்சயம் தன்னுடைய ஏமாளித்தனத்தில்,இருந்து,

விடுபட, வாய்ப்பு  இல்லை என்றே தோன்றுகின்றது. அப்பாவி தமிழக,

மக்களை,கடவுள், தான் காப்பாற்ற வேண்டும். தமிழக மக்கள்

இருந்தாலும் இவ்வளவு அப்பாவியாக இருக்கக்கூடாது.


Tuesday 20 March 2018

ம . நடராஜன் அவர்களின் மறைவு,அரசியல் களத்தில் கலக்கம் யாருக்கு?

திருவாளர், ம.நடராஜன்,  இன்று விடியற் காலை  இயற்கை எய்தினார்.

அன்னாரது,ஆத்மா,சாந்தி அடைய,எல்லாம் வல்ல இறைவன்,

அருள்புரியட்டும் இறைவன் திருவடி நிழலில் இளைபாரட்டும்.. மேலும்,

அவரது பிரிவினால்,  நேரடிபாதிப்பு, அடையும்,  அவரது, மனைவிக்கும்,

அவரது, குடும்ப உறுப்பினர்களுக்கும்,  எங்களது,மனப்பூர்வமான, இதய

சுத்தியுடன், ஆழ்ந்த,அனுதாபங்களை,  தெரிவித்து கொள்கின்றோம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்,  நிறுவனரான,  TTV DINAKARAN,

அவர்களுக்கு,  எங்களின் ஆழ்ந்த, இரங்கலை, தெரிவிப்பதோடு, அவர்தம்,

பயணத்தில்,தொய்வின்றி பயணிக்க, இறைவன் அருள்புரியட்டும்.

ஏனையோரை, அரசனாக்கி,பார்க்கும், யோகம்,  அன்னாருக்கு, இருப்பினும்,

அவர் அரசனாகும் யோகம் இல்லாமல் போனதே, என்று,

 ஏங்கி,தவிக்கும் உள்ளங்களுக்கு,  ஆறுதல் சொல்ல, வார்த்தைகள்

இல்லை. நிச்சயமாக, உறுதியாக,  நிழலாய்,நின்று,அவர் சாதித்ததை

இனி, இன்னொருவர்,நின்று,  செய்ய முடியுமா  என்பது  கேள்விக்குறியே?

அவருடைய,சாணக்கியத்தன, அரசியல், பெரும்பான்மையாரால்

புரிந்துகொள்ள முடியாத ஒன்றே.  அவருடைய தைரியம், அவரை நம்பி,

வாழ்ந்த,  உள்ளங்களுக்கு,  அரவணைப்பாக, இருந்திருக்கின்றது. தேசிய,

அரசியலில்,  அவரின்,நட்பு கலந்த,அணுகுமுறை,  அவரை நம்பி

இருந்தோருக்கு,  பயன்பட்டு வந்ததே உண்மை. ஏனோ,இறைவன் அவரை,

அழைத்துக்கொ ண்டு விட்டார்.  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து

  விடைபெறுகின்றேன்





.






Thursday 15 March 2018

அம்மா மக்கள்முன்னேற்ற கழகம் என்ன சாதிக்க போகின்றது? பார்போம்...

அம்மா மக்கள் முன்னேற்ற  கழகம்,  இன்று, கொடி ஏற்றப்பட்டு,

பிறந்துள்ளது..  இந்த கட்சி  TTV.DINAKARAN  தலைமை பொறுபேற்று,இன்று,

காலை,கொடி ஏற்றி துவங்கி உள்ளார்கள்.  கொடி ஏறறப்பட்ட, நேரத்தை,

கணக்கில்,எடுத்துக்கொண்டு,ஜாதகம்,கணிக்கப்பட்டு,  பலன்

 தீர்மானிக்கப்படுகின்றது.

இக் க  ட்சி, அரசில் பங்கு ஏற்கும்,வாய்ப்பு, சூரியனின், புக்தி காலத்தில், உள்ளது

அந்த நேரத்தில்,  தேர்தல், நடைபெறுமானால்  வெறறியை எதிர்பார்க்கலாம்.

இருப்பினும்,  இவர்  பெண்கள்,மற்றும், கிருஸ்துவர்கள், முஸ்லிம் ஓட்டுகளை

சற்று சிரமப்பட்டு வாங்க, வேண்டி இருக்கும். உழைப்பாளிகளின்,ஒட்டு இவர்

 பக்கம் தான். சதிவேலை செய்பவர்களின்,  செயல்கள், இவரை பெருதும்

 பாதிக்கும்.  மீனவர்களின் ஒட்டு,இவருக்கு தான்.   கணிப்பொறி யாளர்களின்,

வியாபாரிகளின்,ஓட்டை பெற இவர் அவர்களை கவரவேண்டும்,  நடு நிலை

யாளர்களின், புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன் அவர்களின்

  ஒட்டு,இவருக்கு தான். தேசிய கட்சியின் பார்வை, இவரை,

ஈர்க்கும்.  மற்றவை பின்பு....  கீழே ஜாதகம் இணைக்கப்பட்டு உள்ளது.










Wednesday 28 February 2018

பரீட்சைஎழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்

இவ்வாண்டு  2018 ல்  பரீட்சை எழுதப்போகும் மாணவ செல்வங்களுக்கு,

எம்முடைய  வாழ்த்துகள்.  சோர்வின்றி,பயிலுங்கள்.  மனதில் நிறுத்தி

பயிலுங்கள்.  மிதமான, குளிர்ச்சியான,நீர்சத்து,நார்சத்து, மிகுந்த,

உணவினை,உண்டுவாருங்கள்,  அசைவ உணவை  உண்ண,

வேண்டாம்..  எளிதில் ஜீரண மாகும்  உணவை,  சாப்பிடுங்கள்.  நிறைய,

தண்ணீர் பருகுங்கள்.  விளையாட்டு,போட்டிகளில், கலந்துகொள்வதை,

தவிர்த்துவிடுங்கள்.   உங்கள் வீட்டில் விவாதம்  செய்வதை தவிருங்கள்.

தியானம்  செய்ய தெரிந்தால், செய்யுங்கள்.  நண்பர்களிடம்,அரட்டை,

அடிப்பதை,  தவித்து விடுங்கள்.  ஹயகிரீவரை,  வேண்டி  தியானம்

செய்து  வாருங்கள்.  அமைதியாக,  பயமின்றி,  தூங்குங்கள்.   பரீட்சை

எழுத  பயன்படுத்தும், பேனா,பென்சில்,  போன்றவற்றை,  நல்ல நிலையில்

வைத்துகொள்ளுங்கள்.  அந்த  உபகரணங்களை   போற்றி வணங்கி,

பயன்படுத்துங்கள்.   வெற்றி நிச்சயம்.  வாழ்த்துகள்.


ஸ்ரீ காஞ்சி ஜகத்குரு ஜெயேந்திரசரஸ்வதிஸ்வாமிகள் முக்தி அடைந்தார்

ஸ்ரீ காமகோடி காஞ்சி ஜகத் குரு ஜெயேந்திர சுவாமிகள் ஈசனின்  பாதகமலத்தில்

ஐக்கியமானார்.  அவரது திருவருளை,அன்றாடம்,பெற்று வாழ்வில், உயர்வு,

பெற்றோர், பல லக்ஷம் மக்கள். அத்தகைய,ஆன்மீக,சிந்தனையாளர்களின்,

வாழ்வில் அருளாசிகள்,தொய்வு இன்றி,கிடைக்கபெற்று,  நல்வாழ்வு,வாழ்ந்து,

அருளும் ஞானமும்,ஒருங்கே,இணைந்து பெற்று, வாழ  இன்றைய

பேர்அருளாளராகிய

  காஞ்சிமடத்தின்,  அருட்பெறும் ஜோதியாக,விளங்கும்,ஸ்ரீ காமகோடி

 விஜயேந்திரர், ஸ்வாமிகள்,  திடமான,சிந்தனைகளோடு, நின்று

அவர் வழியை பின் பற்றி, ஆஸ்தீக அன்பர்களுக்கு, அருள்பாலித்து,வழி

 நடத்தட்டும்.  அடியார்தம் திருவடிகள் போற்றி போற்றி.போற்றி......

Wednesday 21 February 2018

திரு. கமலஹாசன் தமிழக முதல் அமைச்சர்ஆவாரா?

திரு கமல்ஹாசன்  நேற்று மதுரையில் தன்னுடைய கட்சியின் கொடியை

ஏற்றி  வைத்து கட்சியின் பெயரையும் அறிவித்தார்.  வாழ்த்துகள்.

அவர் கட்சியின் பெயரை அறிவித்த நேரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு

அவருடைய கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அவர் முதல் அமைச்சர்

ஆவாரா? என்பதை ஜோதிட ரீதியில்  ஆய்வு  செய்து  இந்த கட்டுரை

சமர்பிக்கப்படுகின்றது..  அவருடைய  உண்மையான ஜாதகம்  நம்மிடம்

இல்லை என்கின்றபடியால்,இந்தமுறையை  கையாண்டு பலன் கூற முயற்சி

செய்து இருக்கின்றோம்.

எம் அறிவுக்கு எட்டிய வகையில், இம்முறையில்  கணித்து  பலன் கூறும்

நிலை முற்றிலும்  சரியாகவே இருக்கும் என்று  யாம் நம்புகின்றோம்.

கட்சி ஆரம்பிக்கப்பட்ட நேரம்,  கமலஹாசன்  முடிவுசெய்து வைத்த  6 மணி

என்பதுகூட சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன், இருப்பினும்சூரியனையே

பிரதானமாககொண்டதொழில்,அரசாங்கம்,அரசாங்கத்தை அமைக்கும் கட்சி

கொடி ஏற்றுதல்,மற்றும்,கட்சிபெயர் வெளியீடு,என்றசெயல் கள்,அனைத்தும்
.
செய்யவேண்டிய நேரம்,காலம்,பகல் நேரமாகவே இருக்கவேண்டும் .

இதை  குறிப்பிட்டு  சொல்ல,வற்புறத்தி கூற, அரசியல் ஆலோசகர்களுக்கு,

ஞானம்இல்லை போலும். குறைந்த பட்சம்,சூரிய அஸ்தமனத்துக்கு,

06.28  மணிக்கு முன்பாகவே,  கொடி ஏற்றம்,மற்றும் கட்சியின் பெயர்,அறிவிப்பு

 இருந்து இருக்க வேண்டும்.  அவைகளையும், தவிர்த்துவிட்டு  பகுத்தறிவு,

கொள்கையின்பால்,பற்று கொண்டு,நம்பிக்கை வைத்து, கட்சியை துவங்கி

வைத்துள்ளார்.  இடித்து சொல்லும்கருத்துகளை,ஏற்காமல், செயல் படும்

மன்னனாக,வர முயற்சிக்கும்,  தலைவரோ என்று எண்ணுகின்றோம.


 சூரிய ஹோரை அமைந்து இருக்கும்.  காலம்  தாமதமாகி, அவரை,இயற்கை,

ஏழு மணிக்குமேல் கொண்டுசென்று விட்டது.  அது சுக்கிர ஹோரையாக

அமைந்தபடியால், மகிழ்ச்சி கொண்டாட்டம்,கூட்டம் இதற்கு பஞ்சம்

 இருக்காது, என்றுஎடுத்துக்கொள்ளலாம்

அரசு அரசாங்கம் இவைகளை  நிர்ணயிக்கும்,ஹோரை சூரிய ஹோரையே

 ஆகும்.  இதனை இவர்  உபயோகிக்க தவறிவிட்டார்.

அனைத்து கிரகங்களும் , சப்போர்ட் ஆக இருக்கும் நிலையில் சூரியன்

பெருமளவு சப்போர்ட் செய்ய வில்லை என்பதே உண்மை.

சூரியனின் ஆதரவு,  பெருமளவு,இருக்க வேண்டும்.  அடுத்தபடியாக,

செவ்வாய்  அற்புதமாக இருக்க வேண்டும்.  இவைகளே ஒருவரை அரசு கட்டி

கட்டிலில் ஏற்றும்..   இவருடைய ஜாதகம்,சப்போர்ட் பண்ணும் பட்சத்தில்,

 இவருடைய

முயற்சிகள்  வெற்றி அடைய வாய்ப்புகள் இருக்கலாம். எப்படி இருப்பினும்,

கமலஹாசனுக்கு  எம்முடைய அன்பார்ந்த வாழ்த்துக்கள் மற்றும்

 ஆசிர்வாதங்கள்.   யாம் இதனில் வெளியிட்டுள்ள ஜாதகம் எம்முடைய

 ஜோதிட பலனை  ஊர்ஜிதம் செய்யும்.






Saturday 3 February 2018

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் கடைகள் எரிந்தவை தெய்வ குற்றமா?

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் கடைகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு

தீ பிடித்து  சேதப்பட்ட நிகழ்வு  ஜோதிட ரீதியில்  ஆய்வு செய்யப்பட்டபோது

கீழ் கண்ட  பலன் களை   காண முடிகின்றது   கீழே ஜாதகம் கொடுக்கப்பட்டுள்ளது.



தீ பிடிக்க ஆரம்பித்த  நேரம்  10.44  என்று எடுத்துகொள்கையில், பலன் கீழ்கண்டவாறு  இருக்கலாம் என்று  ஜோதிடகணிப்பு  கூறுகின்றது.

லக்ன பாவம்,  மூன்றாம் பாவம், ஏழாம்பாவம் ஒன்பதாம் பாவம்

கடுமையாக  பாதிக்கப்பட்டு  இருந்தமையால்.  இந்த பாதிப்பு  ஏற்பட்டு இருக்கலாம்.

மேற்கண்ட பாதிப்பு  செவ்வாய்  கிரகத்தால் ஏற்பட்டதாக  யாம் கணிக்க முடியவில்லை  ராகு பகவான் கடுமையாக  பாதிக்க  பட்ட நிலையில் உள்ளார்.

கூட்டான  பேர் அழிவு  கோரவிபத்து, பொதுமக்கள் கூடுமிடங்களில் விபத்து,
கூட்டான பொதுமக்கள் பாதிப்பு, இவை அனைத்துக்குமே காரணகர்த்தா,

ராகு தான்.  புக்தியை  நடத்துகின்றார்.  ராகுவே காரணம்.

இது புதனுக்கு உரிய ஸ்தலம்  என்ற வகையில் புதன் கடுமையாக

பாதிக்கப்பட்டு  தொடர்பினால் பாதிப்பில் நிவாரணம் அடைகின்றபடியால்  வியாபார ஸ்தலங்கள்  பெரிதும்  பாதிப்படையாமல் காக்கப்ட்டதாகவே
எடுத்துக்கொள்ள வேண்டும்.

 மேலும் புதன் பாதிக்கப்பட்டு,  அதனால் சீற்றம் அடைந்த நிலையில்அ ம்பாள்

இருப்பதால்  மதுரையில் உள்ள வியாபாரிகள்  இணைந்து சுந்தரேஸ்வரருக்கும், அம்பாளுக்கும்
ராகு கால துர்க்கைக்கும்  பரிகார நிவர்த்தி செய்தால். மதுரை வாழ் வியாபாரிகளுக்கும்,அங்கு  வாழுகின்ற மக்களுக்கும் நல்லது.  பரிகாரங்கள்
செய்து முடிப்பதற்குள்  நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள்

பரப்புரை வழங்க துவங்குதல் நன்மை பயக்காது. இது சத்தியம். உண்மை.
அம்பாள்  தன் கணவர் பாதிக்க பட்ட தாலே  கோவமாக இருக்க வாய்ப்புகள் உண்டு..
தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு எதவும் வந்துவிட வாய்ப்பு இல்லை என்று நாமும் நம்புகின்றோம்.   தமிழகம்  நன்கு செழிப்புடன் இருக்க பிரார்த்திக்கின்றோம்.



Wednesday 31 January 2018

சந்திரகிரகணம் கடைபிடிக்க வேண்டியவை சில

சந்திரகிரகனத்தின் போது  நாம்  திட ஆகாரத்தை தவித்தல் நல்லது.

மேலோங்கிய  சிந்தனைகள், வளர்ச்சியான  பூரிப்பான எண்ண   மன

அதிர்வலைகள்  நம்மிடையே  உற்பத்தி செய்து கொண்டு, மந்திர உச்சாடனங்கள்

தெரிந்தால்  ஜப்பித்துகொண்டும்  இருத்தல்  நல்லது.மனோகாரகன்  கடுமையாக

பாதிக்கபடுவதால்,  தீய குடூரமான  சிந்தனைகளுக்கு  இடம்  கொடுக்க வேண்டாம்.  பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி
நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்  சந்திர தசை நடந்து கொண்டு  இருப்பவர்களும்

சந்திரன்  ஜாதகத்தில்  எட்டு  பன்னிரெண்டாம்  பாவ தொடர்பு  கொண்டு,

லக்னம்  நான்காம் பாவம் ஆறாம் பாவம்   எட்டாம் பாவம்  பன்னிரெண்டாம் பாவங்களின்  துணை  கிரகமாகவோ,  துணை துணை கிரகமாகவோ

அமைந்த ஜாதகர்கள்  அவசியம்  பரிகார சாந்தி  செய்து கொள்ளுதல் நலம்

இவைகள் அன்றி    2, 11, 20, 29  தேதிகளில்  பிறந்தாரும்  பரிகாரம் செய்தல்
நலம்.

மதுர்கரகன் போற்றி என்று  ஜெபித்தல்  நலம் பயக்கும்.

























Sunday 14 January 2018

தை முதல் அடுத்த தை வரை பொதுவான பலன்கள்

சூரிய பகவான் மகர மாச   நுழைவு என்பது  இன்று மதியம்தான்.  இந்த பலாபலன்கள்

சூரியனின்  அமர்வை வைத்து சொல்லுபவை. பொதுவான பலன்கள்  நீங்கள்

அறிய போகின்றவை.

அரசாங்கம்  பற்பல இடர்பாடுகளுக்கு  இடையில்,கஷ்டங்களை  சந்தித்து

பண பலத்தாலும்  வாய் சாதுர்யங்களாலும்  எதிர்கொண்டு  தக்கவைத்து

கொள்ள முயற்சிக்கும்.  அரசாங்கத்திற்குகேளிக்கைகளின் மூலமும் வருவாயும்

அதிர்ஷ்டத்தின்  வாயிலாக  தப்பிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

தண்ணீர் நிலை  பெருகும்.  நாட்டின் தண்ணீர் தேவைகள்கூட  சீர்

செய்யப்பட்டு பெண்களும்  மக்களும் மகிழ்வுற  வருணபகவான்  துணை உண்டு. அரசாங்கத்தின்  பெயரும் தப்பிக்கும்.  சிரத்தையுடன் முயற்சிக்கும்

ரியல் எஸ்டேட்  சராசரியாக  ஓடும்.  அபிரீதமாக ஓட வாய்ப்புகள் இலலை.

போலீஸ்  துறை ஓடிக்கொண்டு இருக்கும். நன்றாக, எப்போதும் போல.

கணினி  மற்றும் எழுத்து  துறை  கல்விக்கூடங்கள்  வியாபாரிகள்,டாகுமென்ட்
எழுத்தர்கள்  நிலை நல்ல படியாக இருக்கும்.

 சக்கை போடு போடும். திருப்பதி  கோவில் வருமானம்  பெருகும்..  பக்தர்கள் அலைமோதுவார்கள்

குழந்தைகள் பாடு கொண்டாட்டம் தான் .  சிவன் கோவிலில் கூட்டம் அலை மோதும்.  பிரதோஷ வழிபாடு  சிறந்து விளங்கும்.. வங்கியில் கூட்டம்

அலைமோதும்.வங்கி கஜானா  சிறப்பாக இருக்கும்.  தங்க வியாபாரிகள் பாடு கொண்டாட்டம் தான்.

பெண்கள்  வழியில் சந்தோஷம்,  பல இடர்பாடுகள் மற்றும்  தடங்கல்கள்

போராட்டங்கள் இவைகளை தாண்டித்தான்

அடித்தள மக்கள் மற்றும் உழைக்கும் வர்க்கம்   வாழ்வில் அலைச்சலுடன் கூடிய  வருமானம் தான்..


எப்போதும் போல் சினிமாக்காரர்கள்   வியாபாரம் கொடிகட்டி பறக்கும்

வெளிநாடுகள் சப்போர்ட்  சிறப்பான முறையில் உண்டு  வெளிநாட்டு

முதலீடுகள் வந்து குவியும். தோல் டாக்டர்கள்பா டு கொண்டாட்டம் தான்.  மின்சார துறையில் அளவோடு முனேற்றம் உண்டு.

ஞானமார்க்கம்  தெளிவைடைந்து  அனைத்து மக்களையும் ஈர்க்கும் பிள்ளையார் கோவிலில்  கூட்டம்  நிரம்பி வழியும்.

ரகசிய புலன் ஆய்வு துறை நல்ல பெயரை ஈட்டும் . விசாரணை கமிஷன்
ரிபோர்ட் தெளிவு உண்டாக்கும் மக்கள்மத்தியில். முன்னேற்றமான நிகழ்வுகள் உண்டு.    சூரியபகவான் போற்றி  போற்றி..




சூரியனின் மகர மாச நுழைவு எப்படி இருக்கும்? பாருங்கள்


Sunday 7 January 2018

ரஜினி ஜாதகம் சொல்வது என்ன? பார்போம்

                             ரஜினி ஜாதகத்தில் மிக அற்புதமாக இருக்கின்ற  கிரகம்

சுக்கிரன் மற்றும் கேது பகவான்  நூறு  சதவிகிதத்தை  எட்டுகின்ற் படியால்

திரை துறையில்  கொடிகட்டி  பறந்தார்.  கேது  நல்ல நிலையில் இருக்கின்ற

காரணத்தால்  ஞானமார்கத்திலும்  அவரால்  எட்ட முடியும்.

அரசியலில் வந்து  பிரகாசித்து  நாட்டு  மக்களுக்கு  நன்மை புரிய வேண்டும் என்றால்  சூரியன்  மற்றும் செவ்வாய்  அற்புதமாக இருக்கவேண்டும்.

இதனில்  செவ்வாய்  நன்கு உள்ளது.  இருப்பினும்  சூரியன்  அக வாழ்வுக்கு

 பயன் படுகின்றதே  ஒழிய  புற வாழ்கைக்கு  பயன் படவில்லை.

இவர்  அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடித்தாலும்  தொடர்ந்து அதில்
இல்லாமல் விட்டுச் சென்று விடுவார்..  வேறு யாரிடமாவது  ஒப்படைத்து

விட்டு  வெளியேறிவிடுவார்.  அந்த  பாக்கிய சாலி யாரோ?  தமிழக மக்கள்

என்ன  செய்யப்போகின்றார்கள்   பொருத்து இருந்து  பார்போம்......


SUPER STAR RAJINI HOROSCOPE WHAT IT SAYS?