Wednesday 22 November 2017

திருமாங்கல்யம் என்ற பெயர் சரிதானா?

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறுகின்ற  திருமண வைபவத்தில்

பெண்ணுக்கு  ஆண்  அணிவிக்கும்  மஞ்சள்  கயிறில் சேர்த்து தாலியுடன்

அணிவிக்கும்  அந்த குறிப்பிட்டகாலம்  திருமாங்கல்ய தாரணம் என்று

பெரியோர்களால்  பெயர் சூட்டப்பட்டு, அந்த வைபம்  திருமாங்கல்யம்

அணிவிக்கும்  வைபவமாக  கொண்டாடி மகிழ்கின்றோம்.  காலம் காலமாக

பல ஆண்டுகள்  இதனை  பேணி  பொக்கிஷமாக  பத்திரபடுத்தி  புனித

அணிகலனாக  பெண்கள் கணவன்  உயிருடன் இருக்கும் வரை தாலியை

தன் கழுத்தில் அணிந்து  மரியாதையை  செலுத்தும்    தாய்மார்கள்

அணியும்  அந்த காலகட்டத்தில் திருமாங்கல்யம்  என்று  பெயரிட்டு

பின்பு   ஸ்ரீ மாங்கல்யம்  என்று அழைக்கத்  தொடங்கலாமே ?  யோசிப்போம்!!

Monday 2 October 2017

கால சர்ப்ப தோஷமா கால சர்ப்ப யோகமா எப்படி கண்டுபிடிப்பது?

கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?  லக்னத்தை உள் அடக்கி எட்டு


 அம்சம்களும், ராகு கேதுவின்  பிடிக்குள் அமர்த்தி பலன் கொடுக்க

ஸ்ரிஷ்டிக்க படுமே ஆனால், அந்த ஜாதகர்  கால சர்ப்ப தோஷ ஜாதகர்

ஆவார்.  இதனில்,  லக்னமோ ,லக்னாதிபதியோ சந்திரனோ, ராசினாதனோ

சூரியனோ,  தெசானாதனோ  ராகு கேது பிடிக்குள், மாட்டிக்கொள்ளாமல்

வெளியிலமர்ந்து  பலன்கொடுக்க  ஸ்ரிஷ்டிக்க, படுவார்களே ஆனால்

காலசர்ப்ப யோகம் என்ற நிலையை ஜாதகர் அடைகின்றார்.

காலசர்ப்ப தோஷம் ஜாதகரை  வாழ்க்கையில்  எந்தவித்திலும்

பிரகாசிக்காமல் செய்துவிடும்.  கிரகங்கள் நல்ல ஸ்தான பலம், உச்சபலம்,

ஆட்சிபலம்  பெற்ற நிலையில் ஜாதக அமைப்பு இருந்தாலும்

கிரகங்களின்  பலமான நிலை  வேலை செய்யாது.  இந்த தோஷமானது

பிதுர், மாதர், வழி சாபத்தால்  ஏற்பட்டு, தொடர்ச்சியாக, அடுத்து அடுத்து

நம் வாரிசுகளை  ஆக்கிரமிப்பு செய்து  குழந்தைகளின்  வாழ்க்கை

கேள்விக்குறி  ஆகிவிடும்.  ராஜ சர்பங்களை  கூண்டோடு  அழித்த  பாவத்தின்

தொடர்ச்சியாகவும், இந்த தோஷம்  ஒரு  குடும்பத்தை  ஆட்கொண்டு

ஆட்டிப்படைக்கும். கால சர்பயோகம் என்பது  இதற்கு  நேர்மாறாக,

ஜாதகர் சிறப்பாக  இருப்பார்.   வெளியில் அமர்ந்த கிரகத்தின் திசையை

தொடர்ச்சியாக, பெறுவார்களேயானால்  மிக பெரிய யோகத்தை ஜாதகர்

பெறுவார்.  இதை போக்கிக்கொள்ளும் பரிகாரம்  உண்டா என்றால்

உண்டு என்ற  பதிலே  உண்மை.கடுமையான சிரத்தையுடன்  செய்யும்

பரிகாரத்தின் மூலம் இதனில் இருந்து  விடுபட  ராகு,கேது  பகவான்கள்

அருள்பாலிக்கட்டும்  பெரும்பாலான, திருமண, புத்திர தோஷங்கள்,  சூன்யமான

வாழ்க்கை நிலை, இந்த தோஷத்தால்  உண்டாகுபவையே!!!!!




Thursday 21 September 2017

நவராத்ரியில் அம்பாளை பூஜிப்போம் வாருங்கள்.....

நவராத்திரி திருநாளில் வீட்டிலேயே இருந்து அம்பாளை பூஜிப்போம்.

வெளியூர் சென்றுவருவதை  தவிர்க்கலாம். ஒன்பது  நாட்களும்

ஒன்பது விதமான அலங்காரங்களில்  அம்பாளை உபசரித்து பூஜித்து

முடிந்தவரை  நவ தானியங்களை கொண்டு  தினமொரு  சுண்டல் செய்வித்து

அம்பாளை உபசரித்து  அழைத்து  இசைபாடி  மகிழ்வித்து நாமும் மகிழ்ந்து

அவளது அருளை பெறுவோம்.  ஒவ்வொரு  நாளும்  ஒவோரு வண்ண

ஜாக்கெட் துணி, வைத்து  நம்வீ  ட்டுக்கு வருகை புரியும்  பெண்களுக்கு

பிற பொருள்கள்  மற்றும்  தட்சணை  சுண்டல் வைத்து உபசரித்து  மகிழ்வோம்.

பத்தாவது  நாளில்  நாம்  திருநாளைபூர்த்தி செய்யும் விதமாக ஆயுத பூஜை

மற்றும் சரஸ்வதி பூஜை செய்து பூர்த்தி செய்து கோள்வோம்.  நவராத்திரி

திருநாளில் அம்பாளின் அருளை பெறுவதால் தாயின் கருணை நம் மீது

வீழ்ந்து நம்மை பீடித்த தரித்ரம் நம்மை விட்டு விலகும்.  மேலும் லக்ஷ்மி

கடாக்ஷம்  கிட்டும். சரஸ்வதியின் அருளால் ஞானம் பிறக்கும்.

அரசாங்கமே  பீடை நீங்கி விமோசனம் பெற இத் திருநாளை கொண்டாடி அம்பாளை மகிழ்விக்கலாம்.  நம் தமிழ்நாட்டில் தான் நாத்திக கருத்துகள்

ஓங்கி ஒலித்துகொண்டே இருக்குமே.  நாத்திகவாதியின்  குடும்பத்துக்கு மட்டும்

இது பொருந்தாது.  நாத்திகம்  வலுக்க  ஆஸ்திகம் வலுக்கும்.தமிழ் பெருங்குடி

மக்களின்  குணமும்  அதுதானே?  நம்பாதே என்ற  அதிர்வுகள் ஓங்கி

ஒலிக்கும் போது  நம்புவோம்  என்ற  அதிர்வு அலைகள்  பெருகத்தானே

செய்யும்.  ஆஸ்திகம்  சிறக்க  அதை வளர்க்கும்  சக்தி   நாத்திகத்திற்கு தான் உண்டு.

நாத்திகமும்  ஊரோடு  இருக்கட்டும். ஆஸ்திகம்  பெருகட்டும்.

Sunday 10 September 2017

மகாளயத்தின் மகிமை உங்களுக்கு தெரியுமா?

ஆவணி மாதத்தில் தேய்பிறையில்  வரும்  நாட்கள் நீட்சி பெற்று புரட்டாசியில் அமாவாசையை தொடும்  நாட்களே  மகாளயம்

என்று  மக்களால் போற்றபட்டு  புனித நாட்களாக  கொண்டாடப்பட்டு

நம் முன்னோர்களை  பூஜித்து வழிபட்டு வருகின்றோம். இந்த நாட்களிலேயே காவேரி புஷ்கரணி தேர்ந்தெடுத்தல் நீராடுதல் அமைவது. நம்

முன்னோர்களும் நாமும் சேர்த்தே நீராடுவோம் காவிரியில். இது இரட்டிப்பு

மகிழ்ச்சி. .தஞ்சை மாவட்டதில் பிறந்து தஞ்சையிலே வசித்து

வாழ்த்து வருவோர்க்கு இது வரப்பிரசாதமே. மகாளயத்தில் நமக்கு

என்ன நற்பயன் கிட்டும். நம்முனோர்களுக்கு செய்யவேண்டிய உபசார
அர்ச்சனை மற்றும் அவர்களுக்கு நாம் செய்விக்கும் உபசரணை

நிச்சயமாக அவர்களுக்கு இப்புலோகத்தில் நாம் அளிக்கும் விருந்து உபசாரங்களை

அவர்கள் ஏற்றுக்கொண்டு நம்மை காப்பார்கள்.

இதனில் ஒரு விசேஷம் என்னவென்றால் அண்ணா திராவிடா முன்னேற்ற

கழக நிறுவனர் எம்.ஜி. ஆர் அவர்களுக்கு

நூற்று ஆண்டு விழா எடுக்கும் இந்தவேளையில், அவருடைய உண்மையான

பக்தர்களுக்கும் அவர் ஆசிவாதம் கிடைக்கும் அதே போல் அம்மாவிற்கும்

அவர்தம் தொண்டர்கள் பூஜித்து அவர்களை மகிழ்விப்பது அம்மாவின் ஆசியை

பெற ஏதுவாகும். இதனை அவர்தம் தொண்டர்கள். புரட்சி தலைவருக்கும் அம்மாவிற்கும்,பூஜிக்கும்
இந்த மகாளய திருநாளில், அம்மாவும் புரட்சித்தலைவரும் இப்புலோகம் வந்து அருள் புரிந்து செல்லட்டும் வாழ்க     மஹாலய பட்ச திருவிழா நோன்பு..

Saturday 12 August 2017

குரு பெயர்ச்சி என்ன செய்யப்போகின்றார் ?

கால புருஷ தத்துவத்தின் படி  குருபகவான்  பாக்கிய ஸ்தானத்தையும் விரைய

ஸ்தானத்தையும்  பொறுப்பு ஏற்று பலன்  அளிக்க உள்ளார்  இவர் கடகத்தில்

உச்ச நிலையும்  மகரத்தில் நீச்ச நிலையும்  அடைந்து மானுடருக்கு பலன்கள்

அளித்து வருகின்றார்.  இவருக்கு பகை வீடு துலாம்.  அந்த வீடுக்கு  தான்

இபபொழுது  செல்ல விருக்கின்றார். இங்கு  இவர்  சித்திரை  சுவாதி விசாகம்

நக்ஷத்திரங்களில்  நகர்வு செய்து  பலன் அளிக்க  வுள்ளார். சித்திரையில்

அமர்ந்து  பலன் அளிக்கும் போது   குரு  மங்கள யோகம்  பெற்று  சிறப்பான

பலனை  அளிக்க உள்ளார்கள்  அடுத்து  சுவாதி நக்ஷதரத்தில்  அமர்வு செய்து

பலன்  அளிக்கும் போதுகுரு சண்டாள  யோகம் பெற்று  பலன் அளிப்பார்கள் .

அது  அவ்வளவு சிறப்பு  இல்லை.  அடுத்து  தன்னுடைய  சொந்த  நக்ஷத்

திரத்தில்   சிறப்பாக அமர்ந்து  அற்புதமான  பலன் அளிக்க வுள்ளர்கள்.

தன்னுடைய பார்வை பலத்தால்   கும்பராசி அன்பர்களுக்கும் மேஷ ராசி

அன்பர்களுக்கும்  மிதுன ரசியன்பர்களுக்கும்  அற்புதமான பலன்களை

வாரி வழங்க உள்ளார்கள்.  ஸ்தான பலத்தால்  மேஷம், மிதுனம், கன்னி

தனுர் ராசி அன்பர்களுக்கும்,  கும்ப ராசி காரர்களுக்கும்  நல்ல பலன்களை

வருகின்ற  குருபெயர்சியில் இருந்து ஓராண்டுக்கு  வழங்க உள்ளார்கள்.

சித்திரை மற்றும் விசாக அமர்வில் இருக்கும் போது  நல்ல பண்களையும்

சுவாதியில்  இருக்கும் போது  சற்று சுமாரான  பலன்களையும்  அளிக்க

உள்ளார்கள்.பரிகாரம் செய்து கொள்ள  வேண்டிய  ராசிக்காரர்கள்  ரிஷபம்,

கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம் மீனம்.

வியாழக்கிழமைகளில்  விரதம் இருந்து சுத்தம் கடை பிடித்து  பிராமண

போஜனம்,வேதபண்டிதர்களுக்கு  தானம்,  வைதீகர்களுக்கு  வஸ்த்ர தானம்

வேத பாட சாலைகளில்  விருந்து கொடுத்து  உபசரித்தல்,  யானை

தரிசனம்  தக்ஷினாமூர்த்தி   வழிபாடு  இவைகள் பலன்   அளிக்கும்.

வசதி  உள்ளவர்கள்  மஞ்சள்  கல்  TOPAZ  வாங்கி   தானம் செய்யலாம்.

மஞ்சள்  நிற ஆடை, பட்டு  வாங்கி  எளியோருக்கு  தானம் செய்யலாம்.

குரு காயத்ரி தினமும்  சொல்லி வாருங்கள்.  குருமாரை  போற்றி வணங்குவோம்.  கனக புஷ்பராகம்  ஒன்று மூன்று ஐந்து ஒன்பது கரெட்டுகள்

வாங்கி  தங்க  மோதிரத்தில் அணியலாம். வசதி உள்ளவர்கள். திரு செந்தூர்

சென்று முருக பெருமானை தரிசித்து  வாருங்கள். ஆலங்குடி,தென்திரு

திட்டை  சென்று குரு பகவானை  தரிசனம்  செய்து வாருங்கள். குரு தெசை,

குருபுக்தி,  நடைமுறையில்  உள்ளவர்களுக்கு  பலன்கள் கூடுதலாக,  நடக்க

வாய்ப்புகள்  உண்டு என்றாலும்,  கோச்சாறமும்  சேர்ந்து  வேலை செய்யும்.

எப்படி இருப்பினும்  குருபகவான்   நல்ல பலன் தர,  அனுதினமும்  அவரை

போற்றுவோம்.


Friday 28 July 2017

ராகு கேது பெயர்ச்சி 12 ராசிக்கரர்களுக்கு என்ன செய்யப் போகின்றார் ?

மேஷம்;   வீட்டு  பிரச்சனை  சற்று   தலை தூக்கும்.  தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை.  வண்டி  வாகனங்கள் பழுதாகி  சரி ஆகும்.
அடிவயிற்றில்  பிரச்னை,  இரத்த சீர்கேட்டால்  தோல்  சுருங்கும்.

ரிஷபம்:   வெற்றி  மேல் வெற்றி  கிட்டும்.  எதிரிகளை  வம்புக்கு இழுத்து
ஜெயிப்பீர்கள். பிரயனங்கள்  கிட்டும்.தீர்த்த யாத்ரை  கைகூடும்.

மிதுனம்:  வாக்கை தவறவிட்டு முழிப்பீர்கள்.  குடும்பத்தில்  குழப்பம்
உண்டாகும்.  உயர்கல்வி தேர்ச்சி உண்டு.

கடகம்:  இந்த ராசிக்காரர்கள்  உடல் நிலை கவனிப்பில்  அக்கறை தேவை.

சிம்மம்:  ஆறாம் இடத்து கேது பகவான்  வெற்றயை  அள்ளிவீசுவார்

கன்னி: நினைத்த காரியம்  கைகூடும். வெளிநாட்டு விசா  பலிதம்  உண்டாகும்
                திருமணம் கைகூடும்.

துலாம்:  வீட்டு  பிரச்னை  ஓங்கி  நிற்கும். தொழில் சக்கை போடுபோடும்.

விருச்சிகம்:    தீர்த்த யாத்திரைகள்  கைகூடும்.  திருமணம் தள்ளிப்போகும்

தனுர ராசி:   சற்று  பொறுமையாக   எதிலும் செயல் படவேண்டிய காலம்

மகரம்:   மனைவியை   பிரிந்து வாழ்வீர்கள்..உடல்நிலை  பாதிப்பு கூடும்.

கும்பம்: வலிய  வம்பிழ்த்து     சண்டை போட்டு வெற்றி காண்பீர்கள்.
நோய் பறந்திடும்.

மீனம்:  நல்ல காலம்  பிறந்து சாதகமாக  பயணிபீர்கள்.  வெற்றி உங்கள் கையில்.

                                                     எல்லாம் அவன் செயல்......

Saturday 22 July 2017

சுக்கிரன் நீச்சம் பெற்ற ஜாதகர் நல்லமனைவி கிடைக்க என்ன பண்ணனும்?

சுக்ரன்  நீச்சம் என்றால்  என்ன?  சுக்ரன்  பலம் இழந்து  நிற்பது.  சுக்ரன்

கன்னியில்  சுத்தமாக  பலம் இழந்து நிற்கும் நிலை.  களத்திர காரகன்
பலவீன  பட்டு  சந்தோஷ பலம் இழந்து  நிற்கின்றார்.  இதனால்

ஏற்படும்   ஆண்  பெண்  பாதிப்புகள்  என்ன?   பெண்களுக்கு  ஏற்படும்

பாதிப்புகளை விட  ஆணுக்கு  தான் அதிகம்.  ஏன்  என்றால்  இவர்தான் களத்திரகாரகன்.  இவர்   நீரழிவுக்கு  காரண  கர்த்தா வாகின்ரர்.

இன் நோய்  பெண்ணுக்கு  பாதிப்பு  கொடுப்பதை விட  ஆணுக்கு  அதிகம்

அளிக்கின்றார்.  ஆணின்  பெண்பால்  ஈர்ப்பு  நிச்சயம் கட்டுப்படும்.

ஆண் உறுப்பு  பலவீனப்பட்டு  ஜாதகர்  மனநோய்க்கு  தள்ளப்படுகின்றார்.

பெண்கள்   ஈர்ப்பு  சக்தியை  முழுமையாக  இழக்கும்  அபாயம்  உண்டு

முழுமையான  இன்ப  ஸ்கலிதம்  இல்லாமை  ஆண் பெண் இருவரையும்

வாட்டும்.  கடுமையான களத்திர  தோஷம்  ஆண் பால் இனத்தவரை  வாட்டும்.

ஒரூ  புத்தகமே  போடலாம்.   பார்போம்..இந்த  களத்திர  தோஷம்
ஒவ்வொரு   ராசி  லக்னக்காரர்களை   எப்படி  பாதிக்கும்  என்பதை  புத்தகத்தில்

படித்து  அறிந்துகொள்ளுகள்.  சுகிரனை  போற்றி  வணங்குவோம்.
.

Tuesday 18 July 2017

ஆடி பீடை மாசமா? நல்ல காரியங்களுக்கு உகந்தது இல்லையா?

சூரிய பகவான்  ஆட்சி  பலம் பெருவதர்க்கு  முநதைய மாதம் தான்  ஆடி.

சூரியனுக்கு  பகை இடம் . அவளவு தான்  சந்திரனுக்கு  ஆட்சி வீடு.

செவ்வாய்க்கு  நீச்ச வீடு.   குருவிற்கு உச்சவீடு.  சுகிரனுக்கு  பகைவீடு.

சனிபகனுக்கு  பகைவீடு.    ராகு  கேது  எறேண்டுபெருக்கும்  பகைவீடு..

புதனுக்கு  கூட  நெருடாலான  இடம் தான்.  குருவும்  சந்திரனும் மட்டும் தான்

மகிழ்ச்சியான  இடத்தை பிடித்து  வைத்து இருக்கின்றர்கள்.  அப்புறம்

ஏன்  பீடை மாசம் என்று  எழுதி   வைத்து சென்றார்கள்.

இம்மாதம்  புத்திரகாரகன்  மற்றும்   பெண்கள்  மட்டும் மகிச்சியுடன்

இருப்பதை அறிந்த   கில்லாடி  வியாபாரிகள்    தள்ளுபடி  வியாபாரத்தில்

பொருளை விற்பனை செய்து  வெளுதுகட்டுகின்றர்கள்.

பொன்னவன்  சிறப்பாக இருக்கும் மாதம் என்பதால், தங்க வியாபாரிகள்

கொழிக்கின்றர்கள்..

கல்யாணத்திற்கு  சீர் கேட்கும்  மாப்பிளை  வீட்டார்  அழுத்தம் கொடுப்பது

ஆடிக்காரை  ஆட்டயபோடத்தான்.  இப்படி இருக்கும் போது  ஆடி எப்படி பீடை மாதம் என்று சொல்லமுடியும்?  அப்புறம் பார்க்கலாம்.

Thursday 13 July 2017

சந்திராஷ்டம தினத்தை வெல்பவர்கள் யார்?

முதலில் சந்திராஷ்டமம் என்றால்  என்ன? சந்திரன் 8 ம் பாவத்தில் இருந்து

ஒருஜாதகருக்கு  பலன் கொடுப்பது. அதாவது  கெடுபலன்கள்  உறுதியாக

நடக்க  வாய்ப்புகள் உள்ள நாள்.  ஒவொரு  ஜாதகரும்  மாதம்தோறும்

எரெண்டே கால் நாட்கள் இதனை அனுபவித்தே  தீரவேண்டும்.

இதனில்  விடுதலை  பெற  வழி வுண்டா என  கேட்பது  காதில் விழுகிறது.
சந்திராஷ்டமத்தின்   முக்கியப்பணி மனோகாரகன்   பலவீனப் படுவது.

அப்ப  மனசு ஒருநிலைபடாத நிலை, மனசு தடுமாறும், தீவிர செயல்கள் கூட செய்யச் சொல்லும். இதனை கட்டுபடுத்த ஒரே ஆயுதம், தியானநிலை மற்றும் யோகப்பயிற்சி, இவைகளை செய்வதின் மூலம் தடுமாறிய நிலையில் இருந்து தப்பிக்கலாம். பாமரனை போய் யோகா பண்ணு  தியானம் செய் என்று கற்பித்தல்,  எடுபடாது.  பொறுமை அவசியம் என்று வேணால் சொல்லாம்..

அவனுக்கு என்ன  தெரியும்.  பரப்ப்ரிம்மம்  போன்று  நிற்பான் ..தியானமும்,

யோகநிலையும்   அறிந்தவனாக  அவன் இருக்கையில்  அவன்  ஏன்  உங்களை

தேடி அலையப்போகின்றான். சந்திராஷ்டமத்தின் வலியை  உணரமுடியுமா?

அவனுக்கு  ஏற்பட்ட அலைச்சல்  வலி வேதனை  பணவிரயம்  ஏமாறுதல்,

பிரயாணங்களில்  நெருக்கடி,  பணத்தை தொலைத்தல்,  பேச்சுவார்த்தையில் தோல்வி,  நட்புமுறிதல், போன்றவைகள்  சந்திறாஷ்டமதினால் தான்  என்று அவன் அறிய வாய்ப்ப்பு  இல்லை.  அரசு  ஆணைகளில் கூட குழப்படி,  விரக்தி,

இன்கம்டாக்ஸ் ரைட்,  அறுவை  சிகிச்சையில் கொளருபடி,  தீயினால்,

காயம்.   கோவில் கும்ப  அபிஷேகம்  கூட நடை  பெருவதில் கூட சிக்கல்.

இப்படி அடிக்கிக்கொண்டே  போகலாம்..சரி  இவளவு  பயமூர்த்தி  சொல்லுகின்ற  இதை ஏன்  ஒருத்தரும் கண்டுகிறது  இல்லை. இதில்
செய்த காரியங்கள்  தொடர்வலிமை பெற்று  பிரச்னையை  கொடுக்கும். திருமண
 சம்பதியர்கள்  இதனை  சந்திக்க நேர்ந்தால்  முதல் இரவு அவ்வளவு தான் அரசியல் வாதிகள்,  மற்றும் பிரபல  நடிகர்கள் மற்றும்  பிரசங்க காரர்கள் கூட

தாங்கள் அன்றாடம்  செய்து வந்த  உடற்பயிற்சி  மற்றும்  தியானம்  குஸ்தி

சிலம்பம்   மல்யுத்தம் போன்ற  பயிற்சிகளை,  மக்களும்  அறிந்து மகிச்சியாக

வாழ  வழி  சொலித்தராத நிலையில்,   இன்றைய  பாரத  பிரதமர்  மோடிஜி

தனது நாட்டு மக்கள  இன்புற்று  வாழ  யோகா  கலையை  இந்த உலகத்தாருக்கு

அர்பணித்த  நிலை  போற்றுதலுக்கு  உரியது மட்டுமல்லாது,  நாம்  கடை

பிடிக்க வேண்டிய  ஒழுக்கமும் கூட. இதே போல் தான்  ஜோதிடமும்.  இதன்

மீது நம்பிக்கை  வையுங்கள்.  ஒருபோதும்  நீங்கள்  முழுமையாக

பாதிப்பு  அடைய  வாய்ப்ப்பு  இல்லை என்று  அறுதி இட்டு கூறலாம்

கிரகங்களை  அதன்  விளையாட்டுகளை  அர்த்தமுடன் பாருங்கள்

நிச்சயமாக  நீங்கள் நிமதியுடன்   வாழ்வீர்கள்  மற்றவரையும்  வாழ

வைப்பீர்கள்.இது உறுதி.  வாருங்கள்  ஜோதிடத்தை  நம்பி..........










Wednesday 5 July 2017

G.S.T. அரசாங்கம் பயன் பெறுமா? மக்கள் பயன் பெறுவார்களா?




இந்திய  அரசாங்கத்தின்   ஜி.ஸ் டி   வரி  ஜனாதிபதி  மூலம்  இந்திய மக்களுக்கு அறிவிக்கப்பட்ட  நேரம்  01.07.2017  MIDNIGHT  12.00:04  SECONDS.  







இந்த நேரத்தில்

பிறந்த   ஜி.ஸ் டி   என்ன   செய்யப்போகின்றது   என்பதை பார்போம்.

ஜோதிட ரீதியாக   அடியேன்   அறிவுக்கு  எட்டிய  கருத்துகளை இங்கு

பதிவு செய்ய ஆசை படுகினறேன். இதில்  எந்த உள் நோக்கமும்  கிடையாது.

ஜாதகம்   போட்டு   பார்கையில்,  இந்த  வரி வசூலிக்கும் முறை  சில சில

மாற்றங்கள்     பெற்று   அரசாங்கத்திற்கு   நன்மை கொடுக்கும்  என்றே

காட்டுகின்றது.   மக்களுக்கு  என்னசெய்யும்?  சற்று  கால தாமதமாக

பலன்   கொடுக்கும் என்பதையும்,  வலியையும்  மக்களுக்கு கொடுக்கும்.

பதுக்கல்கரர்கள்,  கொளையர்கள்,  பலன் அடைவது  நிச்சயமஹாக  கஷடம்.தான்.   மக்களை   மகிஷ்விப்பவரின்  பாடு கொண்டாட்டம் தான்.

பெண்களுக்கு   ஆரம்பத்தில் வலி வேதனை இருந்தாலும்,  பின்  நல்லது..  மென்பொருள்  உற்பத்தி துறை மெதுவாக செல்லும்.

அரசாங்கம் ஆரம்பத்தில்  எதிப்பு வேதனை வலி யை சந்தித்தாலும்,  இறுதியாக

எதிர்ப்புகள்  அடங்கிபோகும்   மகளின்வரவேற்பு  வெளிபடையாக தெரியாமல்

இணைந்து  செயல்படத் தொடங்கும்..உழைக்கும் வர்க்கம்  ஆரம்பத்தில்
வலி வேதனை அடைவதாக  இருந்தாலும்,  அப்புறம்,அவர்கள்  மகிழ்ச்சி

நினைச்சதைப் பெறுவார்கள்..  அரசு கஜானா பெருகும். அரசாங்கம் ஆரம்பத்தில்

வலிவேதனை அடைந்தாலும்  மக்களின்  ஏற்பால்  அந்த வலி  நீங்கிபோகும்.

இந்த பலன்கள்  யாவும்,மேலே குறிப்பு  எடுத்து  கொண்ட நேரத்தின் வாயிலாக

பலன்கள் தெரிவிக்கப்பட்டு   உள்ளது.  என் அறிவுக்கு  எட்டிய வகையில்

கணித்து கூறியுள்ளேன்.  எந்த  சுயலாபமும் கருதாது  இக்கருத்து மக்களுக்கு

பதிவு  செய்யப்படுகின்றது.  ஜோதிடம் வளரட்டும்`  நம் இந்தியா  பொருளாதார  மேன்மை  பல மடங்கு  பெருகட்டும்.`````




 Dr. Navasakthi Sundarjee, Astro Scientist
navasakthissundarjee@gmail.com





Tuesday 27 June 2017

சீமந்தம் வைபவ நாள் குறிப்பது எவ்வாறு?

சீமந்த  வைபவ நிகழ்ச்சி  ஒரு பெண்  கர்ப்பம் தரித்து எட்டாம் மாதம்

ஆரம்பித்து    ஒன்பதாம் மாதம் முன்  பெண்ணை அலங்கரித்து

அனைத்து  உபசாரங்களையும்  செய்வித்து  பெண்ணை மகிழ்உர செய்து

பின் வரும் மாதங்களில்  அதே  மகிழ்வோடு பயணித்து,  பிரசவிக்க செல்லும்

காலம்  முன்  நம்பிக்கையோடு  சென்று,  பிரசவித்து, ஆண்  அல்லது  பெண்

குழந்தையை   பெற்றோர்களுக்கு  பேரக்குழந்தையாக  அளிப்பார்கள்.

தாய்க்கு   செய்யும்  வைபவம்,  நாள்   குறித்து  செய்ய வேண்டும்.

நல்ல நாள்   பார்த்து   செய்தாலும்,  நக்ஷத்ரம்  பார்த்து  செய்யவேண்டும்.

தாயின்  வயிற்றில்  அமர்ந்து  இருக்கின்ற குழந்தை  எந்த  நக்ஷத்திரத்தில்  வளர்ந்து

வருகின்றதோ  அதை கண்டுபிடித்து   ,   அதை பொருத்து  நாள் குறிக்க

வேண்டும்..தாயின்  வயிற்றில்  வளரும் குழந்தையின்  தெசையை  கண்டறிந்து

அந்த நட்சத்திர  நாயகனை   கண்டறிந்து   நாள் குறித்து  தரும்   ஜோதிடர்கள்

இருக்கின்றார்கள்   என்பது  அபூர்வமானது மட்டுமல்ல  அப்பிடிப்பட்ட

ஜோதிடர் உங்களுக்கு  அமைந்தால்  கடவுளின் கொடுப்பினைதான்.  குழந்தையும்  தெய்வக்  குழந்தையே.!!!!  ஆண்  பெண்  குழந்தை  அறிதல்

மட்டும்.சட்டப்படி குற்றமாகும்....நக்ஷத்ரம்  அறிந்து  வைபவம்  கொண்டாடுதல்  குற்றமாகாது.   நல்ல  ஜோதிடரை நோக்கி  படையெடுப்போம்.   எல்லாம்  அவனுடைய  விளையாட்டே???

Saturday 10 June 2017

வடமேற்கு மூலை யாருக்கு யோகம் தரும்?

வடமேற்கு  மூலைக்கு  சொந்தக்காரர்   கேதுபகவான். இவர் இந்த இடத்தை

ஆக்கிரமிப்பு   செய்கிறார்.  பெரும்பாலும்  தனிவீடுகளில்   இந்த  வாசல்

அமைவதில்லை.   கிராமங்களில்  இந்தவாசல்  வீடுகள்   அமைவதுண்டு.

பெரும்பாலும்  நகரங்களில்   பிளாட்  சிஸ்டம்  வீடுகளில்  இந்த வாசல்

அமைவது  தவிர்க்க முடியாதது.  இது என்ன செய்யும். இதன் சிறப்பு என்ன?

இந்தவாசல்  குடும்பத்தாரை  அஞ்ச வைக்கும்.   நிலையாக  உட்காரவைக்காது.

ஓடியோடி  சென்று  சம்பாதித்து  வீடு திரும்பினா  வீட்டுலும்  பிரச்சனைதான்

வீட்டில் ஒரே  வாக்கு வாதம்தான்.  அம்மை  வைசூரி  கட்டிகள், தீர்க்கமுடியாத

வியாதி,   கான்செர்  போன்ற நோய் கள்.  இவைகள்   உறவுகரர்களாகி

சொந்தம் கொண்டாடி,  கழுத்தை பிடித்து  தள்ளினாலும்  வெளியில் செல்லாமல்

சண்டித்தனம்  செய்துகொண்டு   உட்கார்ந்து  கொண்டு இருக்கும்.  நன்மை

என்றால்  குடும்ப  தலைவரின்  ஜாதகத்தை  பார்த்தால்   குரு  பார்வையில்

கேது  அல்லது  குருவுடன்  இணைந்த கேது இருப்பின்,  கேது  திசையில்

பிறந்தவர்கள்   வீட்டில் இருப்பின், அல்லது   கேது தெசை  நடந்து கொண்டு

இருந்தாலும் அல்லது  லக்ன   துணை  கிரகம்   கேது வாஹ   இருந்து

லக்ன பாவ  கொடுப்பினையில்   கேது  நல்ல இடங்களை  பிடிதிக்கொண்டு

இருந்தாலும். இந்த வீட்டு வாசல்  இந்த வீட்டில்  இருபவர்களை  ஒன்றும்

செய்யாது  என்பதைவிட    நல்ல முன்னேற்றம்  கொடுக்கும்.
செவ்வாய்  உச்சம் பெற்ற  ஜாதகர்களுக்கும்   இந்த  வாசல் நன்மையை தான்

கொடுக்கும். இந்த  தலைப்பில்  மட்டும் ஒரு புத்தகம்  போடலாம்.  பார்போம்


Tuesday 6 June 2017

தென் மேற்கு மூலை வாசல் யாருக்கு யோகம்?

வீட்டின் வாசல் அமைவது அவரவர் யோகத்தை பொருத்துஅமையும்

எல்லோரையும் கவர்நது இழுக்கும்  வாசல்  கிழக்கு வாசல் மற்றும் வட

கிழக்கு  வாசல்.  இது எல்லோருக்கும் அமையும் என்று சொல்லமுடியாது.

தெற்கு வாசல்  இது பொதுவாக  போலீஸ் துறை, கட்டிட  பொறியாளர்கள்

ஒன்பதாம்  எண்  ஆதிக்கத்தில்  பிறந்த,  செவ்வாய்  உச்சம்  பெற்றவர்கள்

மேஷ, விருச்சிக,லக்னகாரர்கள்,  ரியல் எஸ்டேட் வணிகம்   செய்பவர்கள்,

இவர்களுக்கு  சிறப்பாக  இருக்கும்,   தென் மேற்கு மூலைக்கு  யார்  சொந்தக்

காரர்    யார் தெறியுமா?   ராகு  பகவான்  ஜாதகத்தில்  அற்புதமாக   இருக்க

வேண்டும்.  ராகு  கடகம்  சிம்மம் மேஷம்  போன்ற    ராசிகளில்  இல்லாமல்

இருத்தல் நல்லது.  ராகு  பகவான்   கார்த்திகை  உத்திரம்  உத்திராடம், ரோகினி

ஹஸ்தம், திருவோணம்   போன்ற   நட்ச்த்ரங்களில்  அமராமல் இருத்தல்

நல்லது..ராகு  உபய  லக்னங்களில்  அமராமல்  இருத்தல் நல்லது.

மேலும்  சந்திரன்  சூரியன்  இவர்களோடு  சேர்ந்து  இல்லாமல்  இருத்தல்

நல்லது.   கால சர்ப்பப  யோக  ஜாதகர்களுக்கு  இது  சிறப்பை தரும்.

ராகு தெசை  நல்ல இடத்தில  இருந்து  தெசை நடத்துமானால்  யோகம் தான்.

4,13,22,31.  இந்த தேதிகளில் பிறந்த  குடும்ப உருபினர்கள்  அதிகம் இருப்பின்

தென் மேற்கு  வீட்டு  வாசல் ஒன்றும் பண்ணாது  நல்லது. அப்புறம்பார்க்கலாம்.


Thursday 25 May 2017

விவாகரத்து உண்டுபண்ணும் லகனங்கள் எவை?

விவாகரத்து  உண்டுபண்ணும் லக்னங்கள் என்று பார்த்தால் முதல்
தரமான  இடத்தை பிடிப்பது  உபய லக்னகாரர்களே !!!
இவங்க  முதல் இடத்தை பிடிக்க உதவும் கிரகங்கள்  புதனும் குருவும்.
எனுங்க  இவங்க இரண்டு பேரும்  சுப கிரகம்,  நல்லவங்க  என்று நாங்க நம்பி
வியாழக்கிழமையும், புதன்கிழமையும்  அர்ச்சனை  குருபகவனுக்கும்,
புதன் பகவானுக்கும், தவறாது செஞ்சுவரோமுங்க. அதிலும் அவங்களே
ஏழாமிடத்தை  அலங்கரித்து  நின்று கொண்டு இருந்தால்,  தசையும்
நடத்தினா, எங்க  வீட்டு  ஜோசியர விட மாட்டாரு,  அர்ச்சனை  பண்ணச் சொல்லி வற்புறுத்துவார்.
தோஷம்  செய்யும் பலசாலியை   மேலும்  பலசாலியாக  ஆக்கிவிடுவாரு.
அவராலே முடிஞ்ச கைங்கார்யத்தை  முடிச்சு  வப் பாரு!!  ஆமாம் ?
அடுத்த இடத்தை  பிடிக்கும்  கிரகம்  யார்  தெரியுமா?
 கன்னி  மற்றும்  மீன லகனகரர்கள்   லக்னத்தில்  சூரியன்  அமையப பெற்றால்
திசையும்  நடத்தினால்  விவாகரத்தை  முடித்து விட்டு தான் மறு வேலை
பார்ப்பார். அதவும் ரேவதிஉத்திரட்டாதி சித்திரை நட்சத்திரம் உட்கார்நதால் பாதிப்பு நிச்சயம்.
இப்பேற்பட்ட  படுமோசமான  தோஷங்கள்   திருமண  வாழ்கையை  ஸ்தம்பிக்க  வைக்கையில்  செவ்வாய்  தோஷம்  என்று சொல்லி
பல திருமணங்கள்  தள்ளி போடப்படுகின்றன.  ராகு  கேது  தோஷம்
என்று சொல்லி  பரிகாரத்துக்கு   தள்ளப்படுகின்றனார்.
ஏழாம்  பாவம்  ஆறாம்  பாவம்  எட்டாம்,  பன்னிரெண்டாம்  பாவம் , தொடர்பு
கொண்டு  லக்ன பாவ   கொடுப்பினையும்  கெட்டு போய்,  ஆணுக்கு
சுக்கிரனும்  பெண்ணுக்கு  செவ்வாயும்  கெட்டுபோய் இருந்தால்,   விவாகரத்து
உறுதி.
திருமண  ஒப்பநதம் என்பது  எவ்வளவு   சென்சிடிவ்  சப்ஜெக்ட்.  ஜாக்கிரதை
குழந்தைகளின்  வாழ்கையில் விளையாடாமல்  விளக்கு ஏற்றி  வை யுங்கள்.  வாழ்க வளமுடன். வம்சம் வளரட்டும்.

Thursday 18 May 2017

ரஜினி அரசியலுக்கு வந்து முதல்வர் ஆவாரா?

ரஜினிகாந்த் அவர்களின் சரியான பிறந்த குறிப்புகள் இன்றி இதை கணித்து
சொல்வது கஷடம் என்றாலும்  பிரசன்ன ஜாதக குறிப்பு கொண்டு சொல்ல
முடியும் என்றாலும் தொலைகாட்சியில் அவர் அறிவித்த நேரம் சரியாக தெரியாத
நிலையில்,  கொஞ்சம் கஷடம் தான் ?
இருபினும் முயற்சியை கைவிடாத நிலையில்  வேறு வழிமுறைகளை
கையாண்டு நேரம் எடுக்கையில்   பதினெட்டாம் தேதி இரவு எட்டு மணி
எட்டு நிமிடம் என்ற ப்ரசன்ன கணக்கெடுப்பின் மூலம் நாம் அறியும்
பலன்கள்  கிழ்  கண்டவாறு வருகின்றது என்ற உண்மையை இங்கு
ஜோதிட ஆர்வலர்களும் தெரிந்து அறிந்து கொள்ளட்டுமே என்று இங்கே
பதிவு செய்கின்றோம்.
எந்தவித சுய லாபம் கருதியும் இதை வெளியிடவில்லை.
அ.    லக்ன பாவ கொடுப்பினை அற்புதமாக இருப்பதால் அவர் நினைத்த  குறிக்கோள் நன்கு தடையின்றி நிறைவேறும். இறைவன் துணை புரிந்தால்
ஆ.  ஆறாம் பாவம் எட்டாம் பாவம்  பன்னிரெண்டாம் பாவம்   எதுவும்
தலை தூக்க வாய்ப்புகள் இல்லை. அப்படிப்பட்ட  நிலை தமிழ்நாட்டில்
இன்றைய சூழ்நிலைகள்  இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை அநேக கட்சிகள் உதயமாகி   தமிழ நாட்டின் தலைமைபொறுப்பை அடைய நினைக்கையில்  ஒரு அசாதாரணமான  சூழநிலை தான் நிலவி வருகிறது
கட்சிகள்  உதய மாகும் நிலையில்  மீடியாக்கள் யூடுப்  பெருகிய நிலையில்   அரசியல் பிரவேசம் செய்தாலும் சொந்தவேலை பார்க்க மறுபடியும் சென்றுவிடுவர் என்றே காட்டுகின்றது.
இ.  அகம் சார்ந்த வாழ்கை மட்டுமே மிக சிறப்பாக இருப்பதால் நிமதியான குடும்பவாழ்க்கையை சிறப்பாக காட்டுகின்றது. ப்ரிச்சனையே இல்லாத குடும்ப சந்தோஷம் மிகுந்து காணப்டுகின்றது. இவ்வாறு இருக்கும் நிலையில்
அரசியல் பிரவேசம் இருக்காது. இருத்தாலும், நிலைத்து இருக்கவிடாது
நிம்மதியான வாழ்க்கையை நோக்கியே  பயணிக்கும்.  எனவே முன் கூட்டியே  தீர்மானிதத்து அரசியலில் பிரவேசிக்காமல் இருப்பது நல்லது. இன்றைய நல்ல பேரோடு
வாழ்க்கையை தொடர் ந்து பயணிப்பது தான்  நல்லது. இதுவேஆண்டவன்
கட்டளையாக கூட அவருக்கு கிடைக்கலாம்.   ஒன்பதாம் பாவம் கூட அதைதான் காட்டுகிறது
        எல்லாம் அவன் செயல்.  தமிழ்நாட்டில்  வேறு யாரோ வந்து பிரச்சனைகளை சமாளித்து மக்களுக்கு நன்மை செய்யட்டுமே 

Saturday 13 May 2017

உயர் கல்வி படிக்க எந்த கிரகஹம் வேலை செய்யும்?

உயர்கல்வி என்ற ஸ்தானம் பறந்து விரிந்து கிடக்கும் இவ்வுலகில்
மருத்துவ படிப்பு மட்டும் நாம் இருக்கும் வூரிலேயே படித்துவிட்டு
நாமிருக்கும்  வூரிலேயே  மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து பணிகிடைத்துவிட்டால் எல்லை இல்லா  மகிட்சி  நமக்கு தான்
அதற்கு  பூர்வ ஜென்ம கொடுப்பினை வேண்டும்.
ஆனால்  ஏனைய  பொறியியல் படிப்பு மற்றும இதர  படிப்பு
வகையறாக்கள்  படிக்க  இந்தியாவை  சுற்றிவரவேண்டும், ஏன் உலகத்தையே
சுற்றி வந்தாலும் ஆச்சர்யம் படுவதற்கு ஒன்றும் இல்லை.
அப்ப  எந்த பாவத்தை வைத்து  முடிவு எடுக்க  வேண்டும் என்றால்  9 ம பாவம்
மறறும  பன்னி ரெண்டாம்  பாவம்.  மற்றும்  தெசை  தொடர்பு,  மற்றும்
புதன் பகவான் நிலை  மற்றும் ராகு பகவன் அனுகிரகம்,  ஆறாம் பாவத்தின்
கடன் பெரும்  நிலை, மேலும் கடைசியாக   லக்னபாவ கொடுப்பினை  இறைவனின் அருள்  எவ்ளவு  வேலை இருக்கு  பார்த்தீங்களா?  நான் சொல்லறது   நல்ல கல்வி நிலையங்களில் பயின்று  நல்ல வேலையில்
அமர்ந்து  உயர்ந்த சம்பளம் பெற ,  எவ்வளவு  கஷ்டம்  பார்த்தீங்களா?
இத்துடன்  பிரசன்ன  ஜாதகமும்  போட்டு  பார்த்து பலன் சொல்ல வேண்டும்.
எல்லாம் அவன் அருள் கொண்டு நிறை  வேற்றிடவேண்டும்  பார்போம்........

Wednesday 3 May 2017

பகவான் சனி ஹோரைபற்றி பொன்னான முத்துக்கள்

பகவான் சனி  ஹோரை பற்றிதெரிந்துகொள்ளும் முன் அந்த சசயோக சக்ர
வர்த்தி யை  அவர் பாதம் தொட்டு  போற்றி  வணங்கி  எழுதுகிறேன்.
சமுதாயத்தின் அடித்தள மக்களிடம் அவர்தம்வாழ்வில் பங்கு எடுப்பவர்.
கற்பிப்பதில் வல்லவர். பாடம் புகட்டுவதில் இவர் தான் அதாரிட்டி.
மந்த புத்திக்கு  சொந்தக்காரர்  ஆனால்  அழமாக  சிந்தித்து செயல் படுவார்.
நிதானமாக செயல் பட்டாலும்,இறுதியில்  வெற்றி இவருக்கே..
                                    அடித்தள மக்களை  நேசிபவர்களை இவருக்கு ரொம்ப
பிடிக்கும்.  ரொம்பவும்  சுத்தம்இவருக்கு பிடிக்காது.  பெரிய  மோசடி பொய்
பெரிய திருட்டு, இவர் அறியாதவை.  பின் இரவு தூங்கி,  முன் விழிப்பர்
சிலர் .   சூதாட்டம் இவருக்கு பிடிக்கும். வயோதிக தோற்றம்
இவருது அடையாளம்.  தாட்சண்யம்  இவருக்கு கிடையாது.  சிறுசேமிப்பு,
ஆயுள் காப்பீட்டின்  தொடர்பு இவருக்கு உண்டு. காலதாமதம்,சாக்குபோக்கு
இவருக்கு ரொம்ப பிடிக்கும்.  கலியுக ராமானுஜர்  மீது அளவுகொண்ட
பற்று கொண்டதினால்  120 ஆண்டுகள் இப்பூஉலகில்  வைத்து இருந்து  அடித்தள
மக்களுக்கு  ஞானம தந்து அவர்தம் வாழ்வில்நன்மைகள் செய்தார இவருக்கு
இறைவன் அளித்த பணி  ஒருவரது ஆயுளை  வைத்திருப்பது எடுத்துகொள்வது.  ஆயுள் காரகன்  இவரே. அதனால் தானே  இவரை பார்த்து பயப்படுவது
                                                    இவரது  அமரவு  ஒருஜாதகத்தில்  சசயோகம்
பெறுமானால்  அந்த ஜாதகரின்வாழ்வில் இவர் துணைநிற்பது திண்ணம்.
சசயோக சகரவர்த்தியின்  பாதம் தொட்டு  வணங்கி  விடை பெறுகின்றேன்.
இவரது ஹோரை  நீண்டகால பயன்தரும்  வேலைகளுக்கு  பயன்படும்.

Saturday 29 April 2017

குருஹோரையில் என்ன பண்ணலாம்?

குரு ஹோரை:    இது ஒரு அற்பதமான  ஹோரை. இந்தஹோரையில்
எல்லாவிதமான   சுப காரியங்களும் செய்யலாம்..  திருமணம்,நிச்சயதார்த்தம்
வளைகாப்பு,சீமந்தம்,  கிரகப்ரவேசம்,  பிரயாணம்,சேமிப்பு பதவிஏற்பு
பால்குடம் எடுத்தல், வேண்டுதல் நிறைவேற்றுதல்,  துணிமணி வாங்குதல்,
மருந்து உண்ண ஆரம்பித்தல்,  ஆஸ்பதியில் சேர்த்தல்,  குழந்தை பிறப்பு
                                               வங்கியில்  சேமிப்பு துவங்குதல். விருந்தாளி உபசரித்தல்
குருவோடு  பேசுதல், குருவை சந்தித்து  ஆசி பெறுதல்,  அப்படி எல்லா
காரியங்களும் செய்திட செழிப்போடு  வளர்ந்து வரும்..  பூமியில்
விதை விதைக்கலாம்.  கருத்தரிப்பு  சோதனை செய்யலாம்.
மாமிசம் மது,மாது  இந்த ஹோரையில்  ஆகாது.  குருநீச்சமான 
ஜாதகருக்கு,இந்த ஹோரை பலன்   தருவதில்லை.  ரிஷபம்,துலாம்,
மிதுனம், கன்னி   இந்த ராசிகளில்  குரு  அமர்த்த  ஜாதகர்களுக்கு குரு
பலன் தருவதில்லை. குரு கேந்திராதிபதிய  தோஷம் உள்ள  ஜாதகர்களுக்கு
குரு  நல்ல பலன்  அளிக்காது..  குரு  சண்டாள  யோக  ஜாதகருக்கு குருஹோரை பலன் தருவதில்லை.  குரு 6,8,12 இல்  மறைந்து  திசை  புக்தி
நடத்தும் ஜாதகருக்கு  குருஹோரை பலன்  தருவதில்லை.எல்லாவற்றிற்கும்
மேலாக  ஆசாரம்  குறைந்து,சுத்தம் இல்லாமல்,வாழ்பவனுக்கும்  குரு
ஹோரை  பலன் தருவதில்லை.   குருவை  போற்றி  வணங்குவோம்.

Tuesday 25 April 2017

புதன் ஹோரை என்ன பண்ணும்?

புதன்  அறிவுசார்ந்த  பண்புகள் செயல்கள்  நிறைந்த  காலம். புத்தகம்
படிக்கலாம்,  கவிதை,கட்டுரைகள்,எழுதலாம். தகவல் அளிக்கலாம்.
தகவல் பரிமாறிக்கொள்ளலாம்,  சிலேடையாக பேசிக்கொள்ளலாம்
கிண்டலடித்து பேசிமகிழலாம்,  குறிப்பு எடுத்து வைத்துகொள்ளலாம்.
கதை வசனம்,எழுதி வைக்கலாம்,  ஜோதிடம் கற்கலாம்.
                                 ஜோதிடம் கூறலாம், யூக வணிகம்செய்யலாம்.
கோள்மட்ட்டிமகிழலாம்..  வரையறுத்த நிலையில்  பிளான் போடலாம்.
ஞாயிரு கிழமைகளில், அதிகர்களிடம் காரியம் சாதிக்கலாம்
செவ்வாய் கிழமைகளில் சண்டை மூட்டி  வேடிக்கை பார்க்கலாம்.
வெள்ளிகிழமைகளில்,  சந்தோஷமான  வைபவங்களில்  கலந்து மகிழ
திட்டம் தீட்டலாம்.  அழகான  படங்கள் வரைந்து  மகிழலாம். வியாழன்
அன்று  புதன் ஹோரையில்  பணத்தை  பெருக்க  உண்டான வழியை
தேடிக்கொள்ளலாம்..  திருமண  பேச்சுவார்த்தை  வெள்ளிகிழமைகளில்
செய்யலாம்.  எல்லா வற்றுக்கும்  மேலாக  அரசியலில்  பிரகாசிக்கலாம்
ஒருவருடைய  ஜாதகத்தில்  நல்ல  நிலையில்  இருப்பின்,  யாராலும்
தீர்த்து வைக்கமுடியாத  பிரச்சனையை  புதன்  தீர்த்து வைப்பார் புதன்
ஹோரையில்.

Friday 21 April 2017

செவ்வாய் ஹோரை என்ன பண்ணும்?

செவ்வாய்  ஹோரை:   இது முரட்டு தனமான  சுபாவம் கொண்டகாலம்.
போரிடுதல்,சண்டை,வம்பு,  குத்து,கொலை,  தீஇடுதல்,வன்முறை,
வாக்குவாதம்,அடிதடி, மோதல்,இரத்தம் சிந்துதல், வன்முறை, பெரிய
கோர விபத்து,  பூகம்பம்,  இயற்கை சீற்றம்  உயிர்  சேதம், கருசிதைவு
வன்கொடுமை,  அகோரசாவு,  இவைகளுக்கு  சொந்தம் கொண்டாடும்
நேரம்தான் செவ்வாய்  ஹோரை.  இந்தகாலத்தில்   நல்லகாரியத்துக்கு
ஏற்றதுஅல்ல.
                                அனுதினமும்  இந்தஹோரை வந்து சென்று கொண்டுதானே
இருக்கின்றது.  என்று  நீங்கள் கேட்பது புரிகின்றது.  உலகின்  எதோஒரு மூலையில்மேலசொல்லப்பட்ட நிகழ்வுகள்  நடப்பது  உண்மை..
எனவே  அன்றாடவாழ்கையில்  இந்த கோரையில் சுமூகமான பேச்சு வார்த்தை  பேசி  தீர்வுகாணும்  விஷயங்கலிலாவது  இந்த ஹோரையை
தவிர்த்து விடுதல்  நல்லது.  சந்திராஷ்டமும், இந்தஹோரையும்  சேர்ந்து
அமையும் காலம், நமக்கு  நிச்சியமாக  சோதனை தரும்  தப்பிக்கமுடியாது.
அறிந்துசெயல்பட்டால்,பாதிப்பின் அளவு  குறைய  வாய்ப்புகள்  உண்டு.
இரத்த  தான  கூட்டமைப்பு, இரத்த செமிப்பு  நிலையத்தில் சாதகம் புரியும்.
அறுவை  சிகிட்சை  செய்பவர்கள்  இந்தஹோரையில்  செய்யலாம்.
.

Thursday 20 April 2017

சந்திர ஹோரை என்ன செய்யும்?

சந்திர ஹோரை:   இது ஒரு நுட்பமான மதி சம்பந்தப்பட்ட ஹோரைஆகும்.
                                       இதனைநாம்  சர்வ ஜாக்கிரதையாக  பயன் படுத்தணும்
                                        கரணம்  தப்பினால் மரணம் என்பதுபோல்  சற்று
                                        அலட்சியமாக  இதனை உப யோகித்தால்  நம்மை
                                         சரியாக  பதம் பார்த்து விடும்.
                                          இந்த ஹோரை  இரண்டு  விதமாக பயன் படுத்தலாம்.
                                           தேய்  பிரைகாலங்களில்  இந்த ஹோரையை  கெடுதல்
                                            செய்கின்றவை,  செய்விப்பவை,  துஷ்டகர்மாக்கள்,
                                             செய்வினை,  போன்றவிற்றுக்கு  துல்லியமாக
                                              பயன்படுத்துவார்கள்.பொதுவாக  ஜாதகர்கள்
                                              இதனை தவிப்பது  நல்லது. பொதவாக  இந்தஹோரை
                                               இரவு நேரங்களில்,  பௌர்ணமியில்
                                                 மிகவும்  பலம்  வாய்ந்ததாக  இருக்கும்..
                                                வளர் பிறையில்  சுப முஹுர்த்த பேச்சு, பெண்
                                                பார்த்தல்,  ஆழ்குழாய்  மற்றும்  கிணறு  தோண்டுதல்
                                                 மருந்து  உண்ணுதல்,  இரத்த  சுத்திகரிப்பு  நிகழ்வுகள்
                                                 க்ரகப்ரவேசம்,  பால்  காட்சுதல்,  முலைப்பால்மருந்து
                                                 தயாரித்தல்,  அரிசி  சேமிப்பு கிடங்கு  வைத்தல்
                                                பார்வதிக்கு  பாலால்  அபிஷேகம்  செய்தல்.
                                                  வெண்பட்டு  தறி நெய்தல்,  வெண்பட்டுஆடை
                                               உடுத்தி  மகிழ்தல.  பெண் அலுவலரை சந்தித்து
                                               காரியம் சாதித்தல்.   கண்ணாடி வாங்கி  அணிதல்.
                                                  பெண்குழந்தையை  போற்றி  ரசித்தல்.
                                                  விதவிதமான  முத்து  மாலை  அணிந்து
                                                  மகிச்சி   பெறுதல்.  கடலில்  முத்துக்குளித்தல்
                                                   வட்டிகடை  வியாபாரம்  துவங்குதல்.இப்படி
                                                  அநேக  நற்  பலன்கள்   பலவற்றை  செய்ய  இந்த
                                                 ஹோரை  உகந்தது.  சித்தபிரமை நோய் நீங்க
                                                  பரிகாரம்  செய்து  பலன்  பெற  அற்புதமான காலம்
                                                  பயன்  பெற வாழ்த்துகள்......................

Tuesday 18 April 2017

சூர்ய ஹோரையில் என்ன செய்யலாம்?

நோய் நீக்கும் மருந்துகள்  தயாரிக்கலாம். மருத்துவரை சந்தித்து
சிகிச்சை எடுக்கலாம். அரசு காரியம் தொடர்பாக அப்ளிகேஷன்
போடலாம். அரசுஅதிகாரிகள், மந்திரி  போன்றோகளை சந்திக்கலாம்.
கிழக்கு நோக்கி  பயணிக்கலாம். கண் மருத்துவரை  சந்திக்கலாம்.
தகப்பனார்  தொடர்பான  தஸ்தாவேஜ்கள் சொத்து சம்பந்தமான
பேச்சு வார்த்தைகள்  நடத்தலாம். சிவன்கோவிலுக்கு சென்று
பிரார்த்தனை  செய்யலாம். ஞாயிரு அன்று  இந்த வேளையில்
இரெட்டிப்பு பலன் கிடைக்க  வாய்ப்புகள் உண்டு. பெண்கள், ஆண்களை
தேடிசென்று பார்க்க  வாய்ப்புகள் அதிகம்.  ஆண்  குழந்தைகள்  பிறப்பு
சாத்தியமானது. மலை காடுகளில் அலைந்து  திரியலாம்.
                                 சிம்ம  ராசியில்  பிறந்தோருக்கு  யோகத்தை  தரும்
மேஷத்தில்  பிறந்தோருக்கு  நல்லபலன் தரும். கன்னியில்  பிறந்தோருக்கு
ஒத்துவராது. இருப்பினும்  மாசி  மற்றும்  சித்திரையில் நல்ல பலன்கள் கிடைக்கும். மகர ராசிகாரர்களுக்கு ஒத்து வராது.இருப்பினும் ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
                               நிறைய இருக்கு சொல்லிகிட்டே போகலாம்.புத்தகம் போட்றேன் வாங்கி படிங்க.

Saturday 15 April 2017

குரு இல்லாத எந்தவித்தையும் பாழ்........

குரு இல்லாத எந்த வித்தையும் பாழ். உண்மை தான்.
எப்படி?  மருத்துவம், ஜோதிடம், யோகா, சண்டைபயிற்சி, ஓட்டபந்தயம்
இசை,  டான்ஸ்,  இப்படி  எதை எடுத்துக்கொண்டாலும், குருவின்
ஆசீர்வாதம்  இல்லாமல் பயிற்சி  இல்லாமல் நாமே சுயமாக கற்றுக்
கொள்ளும்  முயற்சி,  அதை பிறர் முன்  செய்துகாட்டும் வித்தை
நமக்கு  அவமானத்தை உண்டுபண்ணுவதோடு  கலைக்கும்  இகட்சியை
உண்டுபண்ணும், சிலசமையம்,  விபரிதமான  விளைவுகளையும்
உண்டுபண்ணும்.
                                     முறையான படிப்பு மற்றும்  பயிற்சி,குருவின்
உபதேசம் பெறாத  ஜோசியர்கள்  தான் படித்த  புத்தக அறிவையே
மூலதனமாக  கொண்டு,  மேதாவித்தனத்தால்,  பொதுமக்களில்
பலருடைய,  வாழ்கையில்  விளையாடி  சின்னபின்னமாக்கி, தான்
கெட்டபேர்  எடுப்பதுடன்  நிற்காமல்,  ஜோதிடக்கலையின்  மீது, அவப்பேர்
வாங்கி கொடுத்து  வருகின்றனர்.
                                           இக்கலை,இன்று  இந்தியாவில்,  ஒரு சில பல்கலை
கழகங்களில்  முறையான வழிமுறைகள்  மற்றும்  விதிமுறைகள்
பின்பற்ற பட்டு  உரிய  தகுதியான  ஆசிரியர்களை  கொண்டு  போதிக்கப்பட்டு
சிறப்பான முறையில்  பயிற்றி விக்கப்பட்டு  வருகின்றது.
                                             இன்று  எதோ  ஒருகல்வியில், தாங்கள் பெற்ற
முதுகலை  மற்றும், ஏனைய பட்டங்களை  தன்னுடைய  பெயருக்கு
பின்னால் போட்டுக்கொண்டு,  தன்னுடைய பிற படிப்பு மேதாவி தனத்தை
இக்கலையில்  பயன்படுத்தவது,  மக்களை ஏமாற்றும், மற்றும்
இந்த  கலைக்கு இழைக்கும்  துரோகமுமாகும்.  இறைவனுக்கு
இழைக்கும்   அபசாரமுமாகும்.  ஜோதிடக்கலையை  முறையாக
பயின்று, நன்குதேர்ச்சி பெற்ற  குருமார்களை  கொண்டு  அறிந்து
இந்த உலகில்  இக்கலைக்கு  அங்கீகாரம்  செய்வதோடு,  நாமும்
புகழும்  பெருமையும் அடைவோம்.   வாழ்த்துகள்.

Thursday 13 April 2017

தமிழ் புத்தாண்டு பலன்கள் ஹேவிளம்பி வருடம்

இந்த புத்தாண்டு  பிரமாண்டம் நிறைந்ததாக  இருக்கும்.
தனிநபரின்  வருமானம்  மறைமுகசேமிப்பு  சற்று கூடுதலாக இருக்கும்.
பிரயாணங்களின் மூலம்  சம்பாத்தியம்  கொஞ்சம் பரவாயில்லை.
தகவல் தொழில்நுட்பத்  துறை   போராட்டத்துடன் வளர்ச்சி அடையும்.
கல்வி நிறுவனங்கள் போராடிவளர்ச்சி  மேற்கொள்ளும்.
காதலர் பாடு தான் கொண்டாட்டம்.  மகிழ்ச்சி   வெள்ளம்தான்..
கடுமையான்  உழைபாளிகள் பாடுதான்   சற்று   சங்கடம்தான்.
அரசு ஊழியர் பாடு கொண்டாட்டம்தான். மருத்துவர்கள் பாடு ஏற்றம் தான்
தங்கம விலையில் ஏற்றம் உண்டு.  மாணவர்கள்  கல்வியில் போராடி வெற்றி
பெற்று விளங்குவார்கள் போலிசாரின்  குடும்பத்தில் மகிழ்சசி  தாண்டவமாடும்
பெருமாளுக்கு, விநாயகருக்கு,  ஆஞ்சநேயருக்கு   கொண்டாட்டம்தான்.
வெளிநாட்டில் பிழைக்க வழிதேடுவோர்  எதிபாராத விதமாக  முன்னேறுவார்கள்
அமெரிக்கா விசா  கெடுபிடியை தளர்த்தும்.  அரபுநாடுகளுக்குபாயும்
கூட்டம் அதிகரிக்கும்  மது  விற்பனையில் சரிவு தான்.
எல்லாம் கலந்த ஆண்டாக இருக்கும்.  தண்ணீர் பஞ்சம்  வந்து நீங்கும்.
வாழ்த்துகள்.


Wednesday 12 April 2017

பன்னிரெண்டாம் பாவம் பயமுறுத்துதா?

12 ம்  பாவம்  பற்றி  சிலவரிகள்:     மரபு வழி  ஜோதிடத்தில்  அயன
சயன  ஸ்தானம்  என்று  சொல்வார்கள்.  மோக்ஷம்  தரக்கூடிய
 இடமென்றும்  சொல்வார்கள்.   இந்த இடத்தில  அமர்ந்த சில கிரகங்கள்  எந்த
 நன்மையும்  செய்யாது.    இந்த  பாவத்தில்  அமர்ந்த சுப கிரகங்கள்
 தீமை செய்வதில்லை.முழுமையாக, மாறாக  நன்மையையும்  செய்யத் தவறுவதில்லை. இந்த இடம் இல்லாமல் ஒருவருடைய
லக்னம்  உருவாவதில்லை. லக்னத்தை நிர்ணயப்பதில்  இந்த இடமே
பிரதான பங்கு  வகிக்கின்றது.  சூரியன் சந்த்ரன்  செவ்வாய்  சனி  சிறப்பை
அளிப்பதில்லை. அந்தரங்க  சுகங்களில்  கோளாறு  தான்.

                                       இங்கு அமர்வு  செய்கின்ற  குரு,  மற்றும்  கேது, ராகு,
நன்மை  செய்ய  தவறுவதில்லை.
சுக்கிரன் கூட  சுப யோக  சந்தோஷத்தை  தருகிறார்.  பெண்கள் மூலம்
கிடைக்கும்  இன்பசுகம்  அபாரமாக கிடைக்க வய்ப்புகள்  உண்டு.
வேறு  தீய கிரகங்கள்  கெடுக்காமல் இருந்தால்  நல்லது.
இன்னும்  எத்தனையோ  சொல்லிண்டே போகலாம்.  இந்த இடமும்
இரண்டாம்  தொழலை  குறிக்கிற, வெளிநாட்டு வாழ்கையை உறுதிபடுத்தும்.
ஞாபகம்  வச்சிகிங்க,  இப்ப உள்ள  சிறுசுகள் மாமனார் மாமியார்  தொல்லையில்  (இருப்பின்)?   அவற்றில்  இருந்து விடுபட
  ஒரே பரிகாரம்  இந்த பாவம்  வேலை செய்ய இளசுகள்  என்ன செலவும்  செய்ய தயார்!!!!!!   எதார்த்தமாக எடுதுக்கிங்க...பிரச்னை இல்லாமல்
வெளிநாடு  சென்று விடலாம்.....

Friday 7 April 2017

லக்ன பாவம்என்றால் என்ன ?

ஒரு ஜாதகத்தில் ரொம்ப ரொம்ப  முக்கியம் வாய்ந்தது லக்னம்  சூர்யன் அமர்வை
வைத்து  லக்னம்  முடிவு   செய்யப்பட்டு  ஒருஜாதகத்தின்  லக்னம முடிவு
செய்யப்படுகின்றது.
லக்னம் மிகமிக முக்கியம்  வாய்ந்தது.. லக்னம்  தன்னை தானே  இயக்கிண்டு
ஏனைய  பாவங்களையும்  கண்ட்ரோல் செய்து இயக்குகின்றது. லக்ன பாவ
குடுப்பினை   ஜாதகர்ககள் பெற்று  இருக்கவேண்டும்.அந்த ஜாதகமே  சிறந்த
ஜாதகம். லக்ன பாவ  அமைப்பு  எட்டாம்,  பன்னிரெண்டாம்  பாவ  ஈர்ப்பு
இல்லாம இருக்கும்  அமைப்பு  நல்லது.  லக்னம் ஐநது  ஒன்பது பாவ  ஈர்ப்பு
சூப்பர்.  இப்ப  இது போதும்..........

Tuesday 4 April 2017

அடுத்த டாபிக் என்னவாக இருக்கும் ?


மீன ராசி உங்கள் வாழ்க்கை எப்படி?

மீனம்:                    இராசி மண்டலத்தின் கடைசிராசி.   உபயராசி  நீர்தத்துவ ராசி
                                 நல்ல  கெட்டிக்காரர்.  கழுவின  மீனில் நழுவும் நபர்கள்
                                 பொன்பொருள்  தேடி  வெளிநாடு செல்லும்
                                  பலர் இந்த  ராசிக்காரர்கள்.  நாத்தீகம்  பேசுவார்கள்.
                                   லாஜிக் தேடுவார்கள்.  சுக்கிரன் எதிரி.
                                    சூரியன்  இவர்களுக்கு   வெற்றியும் கொடுப்பார்.
                                    திட்டமிடுவதில் வல்லவர்  வெளிநாட்டுவேலைகளில்
                                    கோடி கணக்கில்  சம்பாதித்து  சொத்து சேர்ப்பார்கள்.
                                     கபடதாரி.  அதிகம் பேசமாட்டார்கள்.புதன்  நல்ல நிலையில்
                                      இவர்களுக்கு  இருக்க வேண்டும்.  இல்லையெனில்
                                      திருமண வாழ்கை சங்கடம் தான்.  அதிக  உடல் உழைப்பு
                                       இல்லாத வேலையாக இருக்கும். வீடு வாசல் எல்லாம
                                       உண்டு.  இலவசம் எங்கு கிடைத்தாலும்  கௌரவம்
                                       பார்த்து  வாங்க மாட்டார்கள்.  நல்லவர்கள் தான்.
                                       எதாவது  பொது இடத்தில  பேசிவிட்டு  முழிப்பர்கள்.
                                       ஒரு நல்ல  தத்துவ  மேற்பார்வையாளர்.
                                        எல்லா ராசிக்காரர்களுக்கும்  லக்னத்தை பொருத்து பலன்
                                        மாறும்.      குட்லக்
                                     
                                     
                                 

கும்பம் ராசிக்காரர் தெரிஞ்சிக்க வாங்க.......

     கும்பம்  ராசி;        தைரியசாலிகள்  நல்ல  புத்திசாலிகள். மனம்
                                         தான் இவர்களுக்கு   எதிரி. சுக்கிரன் தான் இவர்களுக்கு
                                         நண்பனும்  எதிரியும்.  வலிமை,தைரியம்,கொண்ட
                                         போலீஸ்  மற்றும்  வக்கீல்  கோர்ட் இவர்களுக்கு
                                          உறவு  கொண்டாடும்  விஷையங்கள். இரத்த சம்பந்த
                                          நோய்கள்  ஒரு சிலருக்கு பாதிப்பை  உண்டு
                                           பண்ணலாம்.  இந்த ராசியில் பிறந்த சிலர்  கட்ட
                                           பஞ்சாயத்து, மற்றும்  பௌண்ட்சர்  வேலையில்
                                            அமர்கிறார்கள்.  சிம்ம  ராசி  நண்பர்களை  தேடுவார்கள்.
                                            அவர்களால் நன்மையைவிட தீமைதான் அதிகம்.
                                             நல்ல  உழைப்பாளிகளை   நேசிப்பார்கள்.  தனக்கு
                                            பிடிக்க வில்லை என்றால்  அவர்களை ஒழித்துவிட்டு
                                            தான்  மறுவேலை பார்ப்பார்கள். இந்தபலன்கள் யாவும்
                                            மெஜாரிட்டி நபர்களுக்கு பொருந்தும். லக்னம்  பொறுத்து
                                             பலன்கள்  வேறுபடலாம்.  எல்லாம் அவன் செயல்.
                                           

மகர ராசி காரர்உங்களுக்கு எப்படி?

மகரம்;                திட்டம் போட்டு  பதுங்கி எதிரிகளை  துவம்சம்செய்வதில்
                               இவர்களுக்கு  நிகர்  இவர்கள் தான்.  நிரந்தர வாழ்கை
                                தத்துவத்தில்   நம்பிக்கை கொண்டவர்கள்.  வலிமை,
                                குறுக்கு வழி,  இவற்றில்  நம்பிக்கை உண்டு.ரகசியம்
                                 காப்பதில் இவர் கெட்டிக்காரர்கள்.  இவர்கள் இறக்கும்போது
                                 அந்தரங்க  வாழ்க்கை  உலகிற்கு தெரிய வரும்.
                                  பணத்தை  கட்டிக்காத்து  சம்பாதித்து,  பின்பு  குறுக்குவழியில்
                                   ஈடுபட்டுதொலைத்து விடுவார்கள். நல்லவர்களை
                                   நேசிக்க தவறிவிடுவார்கள். பிற்காலத்தில்  ரொம்ப
                                    கழ்டபடுவார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்க
                                    மாட்டார்கள்.  இவர்களிருகின்ற்ற இடத்தில  தண்ணீர்
                                     பஞ்சம்  வரும்.  கலை சார்ந்த வாழ்க்கை நன்றாக
                                     இருக்கும்.  தகப்பன்  சம்பந்தப்பட்ட  வழியில் நிம்மதி
                                      இல்லை.   கண் நோய்  மூளை  சம்பந்தப்பட்டகோளாறுகள்
                                       தோன்றி  மறையலாம்.  நரம்புத்தளர்ச்சி நோய் வரும்
                                       நல்ல நண்பர்களை  தேடுங்கள்  பிடித்து தக்கவையுங்கள்.
                               

தனுர் ராசி அன்பர்களுக்கு.......

தனுர் ராசி;                      இவர்கள்வசிக்கும்  இடம்   மேட்டுகுடி மக்கள்
                                          வசிக்கும்  இடமாகத்தான்   இருக்கும்.  வலியப் போய்
                                          யாரிடமும்   யாசிக்க மாட்டார்கள்.  ரூம் போட்டு
                                          யோசனை  செய்து  கெடுதல் செய்ய  மாட்டார்கள்.
                                          கெடுப்பவர்கள்  பக்கத்தில் இருந்து கோள்  மூட்டி
                                           இவர்களை கெட்டவராக  மாற்ற  வழி உண்டு.
                                            உண்மை  தெரிந்தபின் நேசிப்பார்கள்.  தொழிலில்
                                            மிகவும் சாதுர்யசாலி. செவ்வாய் இவர்களுக்கு
                                            நல்லதும்செய்யும்  கெட்டதும்  செய்யும். பெண்களால்
                                            லாபமும் நஷ்டமும்  உண்டு.
                                             இவர்களில் பலர்  பெருமனான  உடல்வாகு
                                             கொண்டவர்கள்.  சுக்ரன் ரோககாரகனாக இருப்பதால்
                                             மேக நோய்  மற்றும் கொழுப்பு நோய் வருவது
                                              தவிர்ககமுடியாதது. சந்த்ரஷ்டமம்  இவர்களை ஒன்றும்
                                               பண்ணாது.  தொழில்  பிரஸ், புத்தகம், கல்வித்துறை
                                               டீச்சிங்  வேலை, யூக வணிகம்  போன்றவை
                                                 அமையும்.  குழந்தைகளை  பற்றியகவலை உண்டு.

Saturday 1 April 2017

விருச்சிகம் ராசி அன்பர்களே!!!!

விருச்சிகம்;      காலபுருஷ தத்துவப்படி எட்டாவது  ராசி.  நீங்களே
                                யூகித்துகொள்ளுங்கள்  வெறியோட நின்னு முன்னேருவாங்க
                                 இயற்கை எவ்வளவு தண்டிச்சாலும் திருந்த மாட்டார்கள்
                                 . சூரியன் இவர்களுக்கு சப்போர்ட்
                                 சனிபகவான் கூட சப்போர்ட் தான்.  குரு பகவான் கூட
                                 அனுகூலம்.  செவ்வாய் சப்போர்ட்.  சுக்கிரன் கூட
                                   அனுகூலம்  தான்.  தான் நினைக்கிறது  தான் ரைட்.
                                    அப்பறம் ஏன் இவங்க கஷ்டப் படுறாங்க   பாக்கியதிபதி
                                    சந்திரன்  நீச்சம்.  அதுதான் காரணம்  மற்றபடி நல்லவங்க
                                    வெற்றியாளர்  நினச்ச வேலையைமுடித்து   விட்டு தான்
                                     தூங்குவார்கள். பெரிய செலவாளி போல்  தம்பட்டம்
                                      அடித்கொள்வார்கள்.  அது உண்மை இல்லை. செலவு
                                     செய்ய வேண்டிய இடத்தில செய்யாமல்  வாய்ப்பை
                                      நழுவ விட்டு விடுவார்கள். அரசு அதிகாரியாகவோ
                                      அரசியல்வதியகவோ  இருப்பின்  சக்கைபோடு தான்.

Friday 31 March 2017

துலாராசி நடு நிலையானவர்கள் பார்ப்போமா....

துலாராசி அன்பர்களே; 
தன்னுடைய  சொந்த விஷயங்களில்,நடுநிலையானவர்கள் இவர்கள்.
பிறர்   விஷயங்களில்  முடிவு  எடுப்பதில்  காலதாமதம்
மற்றும்  கவனக்குறைவான  அனுகுமுறைகள், சுயநலமான                                   பண்புகள்  தெளிவாக  தென்படும். அது  உடனே
பிறரின்  மனதை புண்படுத்தாது  என்றாலும்  எதிர் பார்டிக்கு
பெருமளவு  பாதிப்பை உண்டு  பண்ணலாம்.  அதை பற்றி
கவலையே  படமாட்டார்கள்.  நல்ல  நிகழ்வுகளை  பிறருடன்
பகிராமல்  சமார்த்தியமாக  இருப்பவர்களும் இவர்களே. சற்று
சுயநலமான பண்பு கொண்ட இவர்களில் சிலருக்கு  கஷ்டங்கள்
வருவதில்லை.
பெரும்பாலானவர்களுக்கு இரத்தஅழுத்தநோய்  வருவதில்லை.  
மேஷராசி காரர்களுக்கு கொஞ்சம் வளைந்து கொடுப்பார்கள் ..
தற்போது  ஜூன்  வரைக்கும்  ஏழரை  சனியின் தாக்கம் குறையும்.
கவலை வேண்டாம்.
                                   

கன்னி ராசி நேயர்கள் எப்படி?

       கன்னிராசி;      பேருக்கு ஏத்தபடி இந்த ராசிகரர்கள் அப்படி தான்.
                                      ஆறாவது  ராசி காலபுருஷதத்துவப்படி  நோய் வழக்கு
                                       கடன்  எதிரிகள்  இவைசார்ந்த  விஷயங்களை  கொண்டு
                                        வாழ்க்கை  அமைந்த நிலையை  கொண்டு இருப்பார்கள்.
                                        கெட்டிகாரர்கள்,  வேலை  திருமண  விஷயங்களில்
                                         ஜாக்கிரதை,  வியாபாரம்  இவர்களுக்கு ஒத்துவரவில்லை.
                                         தகப்பனார்  ஆசிர்வாதம் கிடைப்பது  கஷ்டம் ஒருசிலருக்கு
                                         நன்றாக  கொடுத்து வைத்ததுபோல்  கிடைக்கும்.
                                         சனி பகவான்  அருள்  நன்றாககிடைக்கும். வாழ்கையில்
                                         வெற்றி  உறுதி. காரிய பலிதம் உண்டு.  ஒரு  சிலர்
                                         வெளிநாட்டில்  குடியேறி செட்டில் ஆகி விடுவார்கள்.
                                         செவ்வாய்  எப்போழுதுமே  பகை தான்.  ஆனால்
                                         சித்திரையில்  பிறந்து இருந்தால் கவலையில்லை.
                                          வீடுவாசல் உண்டு.வசிக்க முடியாது. பெண்குஷந்தை
                                           யோகத்தைதரும்.

Thursday 30 March 2017

சிம்மராசி பற்றி சத்தம் போடாதீர்கள் சைலென்ஸ்!!!

சிம்மம்;            இவங்களைப்பத்தி  சொலறதுக்கு  நிறைய இருக்கு.  இவர்கள்
                             நீட்டின கை உத்தரவுக்கு  மறுபேச்சு கிடையாதுன்னு
                             ஒருத்தர் உண்டுன்னா   அது ரிஷப ராசி காரர் தான்.  வளரச்சிக்கு
                              காரணம் இவர்கள் தான்   என்று  ஏத்துக்கணும்              
                             
                                இவர்களில்   பெண்களைப்பற்றி  கேட்கவே வேண்டாம்.
                                 நிறைய  சொல்லணும்   இந்த பக்கம் பத்தாது.  புத்தகம்
                                 போடனும்.   புத்தகம் வெளிவரும்.   படிச்சு அதை பொக்கிஷமா
                                  வைத்துகொள்ளுங்கள்.  வாழ் நாள் பூரா   பயன்படும்..
                                  இடிப்பாரை பக்கத்தில்வைத்துகொள்ளுங்கள். புகழ்வோரை
                                  ஒதிக்கிவிட்டு  வாழுங்கள். நல்லது.

கடக ராசி மற்றும் கடக லக்ன காரர் களுக்கு

      கடகம்;      வளர்பிறை கடக  லக்ன ஜாதகர்   தெளிந்த  மனம் கொண்டவர்கள்
                             அனைத்து  பாலரையும்  ஈர்த்து  தான் வயப்படுத்துவார்கள்                           அடித்தள  மக்களுக்கு சப்போர்ட்  செய்து  முன்னுக்கு வர உழைபார்கள்                               பாடுபடுவார்கள்.  இருப்பினும்  அடித்தள மக்களில் சிலர்
                               உதவியை  பெற்றுக்கொண்டு இவர்களுக்கு
                               எதிராக நடந்து  தொல்லை கொடுப்பார்கள்.   இவர்கள்
                               கும்பம்   மிதுனம்  இவர்களை  நம்பி  இணைவதை  தவிர்க்கவும்
                                உயர்ந்த  லட்சியம்  கொண்ட இவர்கள்  சாதிப்பது  இறைவன்
                                 எப்போதும்  இவர்களை  காத்து  கொண்டு இருபதினால்
                                தான்.  இவர் கள்  வாழும் இடத்தில்   தண்ணீர்  கஷ்டம்
                                 வரவே வராது...........

மிதுனராசி அன்பர்களே நீங்க எப்படி

மிதுனம்;      அறிவாளிகள், புதனை தவிர சூரியன் மற்றும் வளர்பிறை
                         சந்திரன்  இவர்களுக்கு மட்டும் நன்மையை நிச்சயமாக செய்யும்.
                          ஏனைய  கிரகங்கள் அனைத்தும்   நன்மையையும் தீமையும்
                           கலந்து செய்யும்.  இதனை  படித்து  விட்டு  பயப்படாதீர்கள்.
                           நீங்கள்  அறிவாளியாக     இருப்பதால்  சமாளித்து  விடுவீர்கள்
                            விவேகமான நீங்கள்  நல்ல நண்பர்களை  தேடிபிடித்து
                             தக்க வைத்துகொள்ளுங்கள்.  பெண் குழந்தைகள்  என்றால்
                            பாசம் ஜாஸ்தி.  திருமணம்  விஷயத்தில்  வெற்றி  காண்பது
                              கடினம்.  கீழ்நிலை  வேலைகரர்களால்  தொல்லையும் உண்டு
                             லாபமும் உண்டு.   

Wednesday 29 March 2017

ரிஷப ராசி அன்பர்களுக்கு

ரி ஷபம்;  மகிச்சிக்கு  உதாரணமாக செயல் பட வாழ்கை அமைக்க எத்தனிபவர்கள்    வறுமையிலும் நேர்மை. கலகல  என்று பேசுவார்கள்.
பகைவர்களையும்   தன்பக்கம்இழுத்து போடுவார்கள்.  ஆயுள் முழுக்க உழைக்க தயங்கமட்டர்கள்.  அளவான சிற்றின்ப  பிரியர்கள். மதுவை வரவேற்பார்கள். மாது வந்தால் வேண்டாம் என்று ஒதுக்க மாட்டார்கள்
கோடுபோட்டால்        ரோடு  போட்டு விடுவார்கள்.
நிரந்தர  பணியை  விரும்புவர்கள்.  சகோதர பாவம் நன்மையையும் தீமையும்
செய்யும்.  கலைநய மிக்கவர்கள். சந்திராஷ்டமம்  இவர்களுக்கு நன்கு வேலைசெய்யும்.  இவர்களுக்கு அந்தகாலம் சோதனைகாலம் தான்
குழந்தைகளால் லாபமும் தொல்லையும் உண்டு. அடுத்து பார்க்கலாம்.

மேஷம் ராசி பற்றி கொஞ்சம்....

மேஷம்;    இவங்களை பற்றி சொல்லணும் என்றால் எளிதில் உணர்ச்சி
                       வசப்பட்டு, தன்னுடைய  முக வரியை  miss பண்ணுவார்கள்
                        வம்பு  விசா ரித்து,  தன்னைதேற்றிக்  கொள்வார்கள்
                         புத்திசாலித்தனமாக  எதரிகளை சந்திப்பார்கள்
  தோள் வலிமை  கொண்டவர்கள்.  வீரமானவர்.
                          இரத்த சம்பந்தமான  உறவில்  பாசம்  கொணடவர்கள்  
                            சிற்றின்ப  பிரியர்கள்.  எதிர்  பாலின ரிடம்  அன்பு கட்டுவார்கள்
                            கடின உழைப்பை கொண்ட வெற்றி  இவர்களுடையது
      சிம்ம ராசி  காரர்களை  தான் வயப்படுத்வர்கள்.இது பெரிய விஷயம்
                                ஒரு சிலர்   உளவாளிபோல் வேலை  பார்பார்கள்.
                               குழந்தை  சம்பந்தமாக  கவல  இருந்து கொண்டே இருக்கும்
                                இவர்களுக்கு  எதிரி  யார்  தெரியுமா? புதன் ஆதிக்கம்
                                 அதிகம்  வலுபடாதவர்கள்.  மக்கு இவர்களுக்கு பிடிக்காது.

Sunday 19 March 2017

புதன பற்றி

அன்பர்களே இடையில் கொஞ்சம்வேலை உங்களைசந்திக்க முடியல்லே
இன்னிக்கு புதன பற்றி
தெரிஞ்சிக்கலாம் வாங்க  புத்திக்கு  உள்ள கிரகம்
சிலேடையா பேசி  மற்ற்றவரை
மகிழ்விக்கற கிரகமும்  அது  தான்.   விகடகவி   என்பார்கள்
உடம்புலே  வாதம் பித்தம்
சசிலைத்துமம். நரம்புமண்டலதுக்கு
சொந்தக்காரர்.  கோள்
மூட்டு பவரும்  அவரே       மஹாஷ்ணுவும்  அவரே   நாளை  பார்போம்

Friday 10 March 2017

சூரியனை பற்றி

வணக்கம்அன்பர்களே இன்னிக்கு சொல்லபோறது சூரியனை பற்றி

மூளைக்குசொந்த காரர், ஆன்மா, அறிவு, மூளை எலும்பு D3 அரசு அரசாங்கம்
ராஜா எல்லாமே அவர்தான்.கீழ்படிந்துனடப்பதுமட்டுமே அவருக்கு
பிடிக்கும்.எதிர்த்து பேசுவது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.மற்றவர்களை
வேலை சொல்வார்களே ஒழிய தனனை யாரும் வேலை சொன்னால்,.சோம்பேறி   என்று சொன்னால் பிடிக்காது.
ஓருவருடைய ஜாதகத்தில் உச்சம் பெற்று இருப்பின் அவர் சோபிப்பதில்லை
ஆட்சி  பெற்று இருப்பின் சோபிக்கின்றர்கள்.  நீச்சம் பெற்று இருப்பின்
அந்த ஜாதகர்  சோபிப்பதில்லை.  நன்றி அப்பறம் பார்க்கலாம்

Thursday 9 March 2017

நவரத்னங்களை அணிவதின் மூலம் நாம் பலன் பெற முடியுமா?

நவரத்னங்களை அணிவதின் மூலம் நாம் பலன் பெற முடியுமா?
ராசிப்படி நவரத்னங்களை அணிவதின் பலன் உண்டா?
லக்னப்படி கிரஹங்களை தேர்ந்தெடுத்து நவரத்னகர்களை அணியலாமா?

மேலசொன்னபடி அணிந்து பலன் உண்டில்லையா என்பதைதெரிந்து கொள்வது  நம் உடம்பிற்கு நாமே மருந்து  எடுத்துகொள்வது போன்றது.
நமக்கு என்ன தேவையோ அந்த கிரகம் வலுவில்லை என்றால் அதை பலப்படுத்தலாம். இயற்கையாகவே அந்த கிரகம்பலமாக இருப்பின் அதைபலப்படுத்த தேவை இல்லை.
நல்லஜாதி கற்களை  பூஜை செய்து பிராண சக்தி ஊட்ப்பட்டநிலையில் அந்தகிரகம் வேலை செய்யும். பலனை கண்கூடாக காணலாம் முதலில்
ஜோதிடத்தை முறையாக பயின்றவரா? என்று பார்த்து அவரிடம் சரியான ஆலோசனை பெற்று பிராணசக்தி செய்து அணிந்து கொள்ளவேண்டும்
astrosundarjee.com website இல்உங்களைப்ரீமேம்பெர்ஷிபாக்கி கொள்ளுங்கள்

Tuesday 7 March 2017

சனிபகவானுக்கு யாரை பிடிக்கும்தெரியுமா?

சனிபகவானுக்கு யாரை பிடிக்கும்தெரியுமா?   

உழைப்பாளிகளை
சுரியனுக்குயரை பிடிக்கும் தெரியும்மா?             நிமிரிந்தநடை கொண்டவனை
புதனுக்கு யாரைபிடிக்கும்                     அறிவாளியை
செவ்வாய்க்கு யாரை பிடிக்கும்            கட்டுடல்கொண்ட வீரனை
குருவுக்கு யாரைப்பிடிக்கும்                   சுத்தமானவனை
சுககிரன் யாரை விரும்புவர்தெரியுமா   சந்தொஷமனவனை
வளர் பிறை சந்திரனுக்குயாரைப்பித்க்கும்தெரியுமா  குழப்பம் இல்லாதவனை
தேய்பிறை சந்திரன் யாரைவிரும்புவர் தெரியுமா     குழப்பம் நிறைந்தவனை
ராகுவிற்குயாரைப்பிடிக்கும்   கபடமனவனைகுறுக்கு வழிதேடுபவன்
கேதுவிர்க்கு யாரைப்பிடிக்கும்   ஞானியை

சனி பகவான் பெயர்ச்சி

ஜனவரி26 சனி பகவான் பெயர்ச்சி ஏற்பட்டு தற்காலிகமா பகவான்தனுர்ரசி சென்றுள்ளார். அவர் அங்கேஆறு மாதகாலம் இருப்பார்.எந்த காலத்தில்௧௨ ராசிகளுக்கும் ஏற்படபோகின்ற பலன்களைஒருவரியில் பார்போம்
மேஷம்  அஷ்டமத்துசனியின் பிடிலேருந்து விடுதலை. காரியங்கள் கைகூடும்
ரிஷபம்  கடினப்ப்ரயசையில் கரியங்கள்கைகூடும்
மிதுனம் கணவன் மநைவி உறவில்விரிசல் தெரியும்.ஓடிக்க்கலாம்போருமை அவசியம்
கடகம்  வம்பு சண்டைவில்லைக்கு வந்கிவருவீர்கள்  ஜாக்கிரதை
சிம்மம்  மந்தமான புத்தியுடன் செயல்படுவீர்கள்
கன்னி  ஒருனல்போலோருனால் இருக்காது உடம்பு ஒத்துழைக்காதுஅலசிளைதவிக்கவும்
துலாம் நீங்கள் கெட்டிக்காரர்சமாளித்து விடுவீர்கள்
விருச்சிகம்  தங்களின் பெச்சில்நிதனம்தேவை வாக்கு தவுறும்
தனுசுஉடல் சோர்வு அதிகம்கநப்படும் அல்லச்ளை தவிர்க்கவும்
மகரம் அஹலக்கால் வைகதீர்கள் கவிந்துவுளுவீர்கள்
கும்பம்  வீரச் செலவுகாலம் பாத்து செலவு பண்ணுங்கள்
மீனம் வேலை பெண்டுவங்கும்சளைக்காமல்வேலை பன்னுங்கபலன்கிட்டும்
                                                அப்புறம் பார்போம்