Friday 21 April 2017

செவ்வாய் ஹோரை என்ன பண்ணும்?

செவ்வாய்  ஹோரை:   இது முரட்டு தனமான  சுபாவம் கொண்டகாலம்.
போரிடுதல்,சண்டை,வம்பு,  குத்து,கொலை,  தீஇடுதல்,வன்முறை,
வாக்குவாதம்,அடிதடி, மோதல்,இரத்தம் சிந்துதல், வன்முறை, பெரிய
கோர விபத்து,  பூகம்பம்,  இயற்கை சீற்றம்  உயிர்  சேதம், கருசிதைவு
வன்கொடுமை,  அகோரசாவு,  இவைகளுக்கு  சொந்தம் கொண்டாடும்
நேரம்தான் செவ்வாய்  ஹோரை.  இந்தகாலத்தில்   நல்லகாரியத்துக்கு
ஏற்றதுஅல்ல.
                                அனுதினமும்  இந்தஹோரை வந்து சென்று கொண்டுதானே
இருக்கின்றது.  என்று  நீங்கள் கேட்பது புரிகின்றது.  உலகின்  எதோஒரு மூலையில்மேலசொல்லப்பட்ட நிகழ்வுகள்  நடப்பது  உண்மை..
எனவே  அன்றாடவாழ்கையில்  இந்த கோரையில் சுமூகமான பேச்சு வார்த்தை  பேசி  தீர்வுகாணும்  விஷயங்கலிலாவது  இந்த ஹோரையை
தவிர்த்து விடுதல்  நல்லது.  சந்திராஷ்டமும், இந்தஹோரையும்  சேர்ந்து
அமையும் காலம், நமக்கு  நிச்சியமாக  சோதனை தரும்  தப்பிக்கமுடியாது.
அறிந்துசெயல்பட்டால்,பாதிப்பின் அளவு  குறைய  வாய்ப்புகள்  உண்டு.
இரத்த  தான  கூட்டமைப்பு, இரத்த செமிப்பு  நிலையத்தில் சாதகம் புரியும்.
அறுவை  சிகிட்சை  செய்பவர்கள்  இந்தஹோரையில்  செய்யலாம்.
.

No comments:

Post a Comment